#316 என் காதலே.. என் காதலே - டூயட்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
...
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா? இல்லை போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா? உனை அமுத விஷமென்பதா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா? தடுமாற்றமா? என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா, இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு..
...

#315 மயங்கினேன் மன்னன் இங்கு - சேலம் விஷ்ணு

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: சேலம் விஷ்ணு

இசை: சங்கீத ராஜன்

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு

இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

...


மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே

நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே

மணநாளும் வாராதோ.. அன்பே வா வா


மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு

இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

...


ஆசை கடலாக.. நானோ அனலாக

வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்

திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா


மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு

இசைத்தேன் உனக்காக..

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா

தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா

...

#314 மாமரத்துக் குயிலு - ராஜா ராஜாதான்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ராஜா ராஜாதான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: மாமரத்துக் குயிலு
...
பெ: பூமஞ்சமிடும் மயிலு
...
பெ: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...
பெ: உன் மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...

: மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பூசும் சின்னப் புள்ள
மாராப்பு காத்தோடு ஆடும்
பெ: கல்யாணத் திட்டமிட்டு
கண்ணாலே வட்டமிட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
: முந்தானைப் பந்தல் இட்டு நான் தூங்கவா
பெ: முன்னூறு முத்தம் ஒன்னா நான் வாங்கவா
: அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
பெ: அங்கமெங்கும் மோகத்தில் தீயாச்சு வா
: அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா

: மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...

: மானுன்னா மானும் இல்லே.. மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
பெ: நானுன்னா நானுமில்ல.. நீயின்னா நீயுமில்ல
நீயின்றி நானிங்கே உண்டோ
: நீ போகும் பாதை எல்லாம் என் பாதைதான்
பெ: நீ பார்க்கும் பார்வை எல்லாம் என் பார்வைதான்
: மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
பெ: கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷந்தான்
 & பெ: சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்

: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா

: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...