#307 பார்த்துப் பார்த்துக் கண்கள் - நீ வருவாய் என

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: நீ வருவாய் என
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுதியவர்: பா.விஜய்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...

: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...
பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்.. நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திடக் கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்.. அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்.. எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து.. தினம் வழி பார்த்து.. இரு விழிகள் தேய்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
நீ வருவாய் என.. நீ வருவாய் என
...

#306 நில்லாத வெண்ணிலா - ஆணழகன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஸ்வர்ணலதா

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

: மான் துள்ளும் மலையாளத்தின் விழிச் சித்திரமே.. சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே.. நன்னிலமே
பெ: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ.. தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில் உன்னைச் சந்தித்ததோ.. சந்தித்ததோ
: பொன்னல்லவோ.. சிறு பூவல்லவோ
மெல்லத் தொடவோ.. என்னைத் தரவோ
பெ: தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ.. நான் தரவோ
: செம்மீன்கள் துள்ளுதே.. இங்கும் அங்கும்.. கண்ணோடையில்
பெ: சந்தோஷம் பொங்குதே .. முன்னும் பின்னும்.. உன் கூடலில்
நான் சொல்லவோ.. சின்னப் பெண் அல்லவோ..

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
பெ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
...

பெ: நீ வர எதிர்பார்த்தது இந்த நந்தவனம்.. நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம்.. செங்கமலம்
: காமனின் கலை காண்பது இந்த அந்தப்புரம்.. அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது இங்கு சப்தஸ்வரம்.. சப்தஸ்வரம்
பெ: மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ.. இல்லை கொஞ்சுமோ
: உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ.. அள்ளிச் செல்லவோ
பெ: அன்றாடம் சேர்வது.. மன்னா.. மன்னா உன் பொன்மடி
: எந்நாளும் இன்பமே.. நீயே.. நீயே என் பைங்கிளி
ஓ.. மங்கையே.. பொங்கிடும் கங்கையே

பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...