பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!
படம்: செவ்வந்திஇசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...
தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது
அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...