இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி
ஆ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...
ஆ: சொல்லால் சொல்லாதது
காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது
கைகள் தொட இந்நாள் ஒன்றானது
ஆ: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
ஆ: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
ஆ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...
பெ: வந்தாள் புல்லாங்குழல்
வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
ஆ: மன்னன் சொல்லும் கவி
மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
ஆ: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே
ஆ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
ஆ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...
0 மறுமொழிகள்:
Post a Comment