323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...
ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன், என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன், முடியவில்லை
இமய மலையென்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

ஓ.. ஓஓ.. ஓஓஓ.. ஓ ஓஓ.. ஓஹோ..
ஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ ஓ.. ஓஓஓ ஓ.. 
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. இன்னும் உறக்கமென்ன?
பாலே பசுங்கொடியே.. இங்கே வருத்தமென்ன?
...

தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
யாரடி உன்னைப் படைத்தார்? அன்னையும் தந்தையும் இல்லை
கூறடி.. என்னைக் கெடுத்தார் தெய்வமா? நம்பவும் இல்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன?
உண்மைதான் சொல்லடி.. முல்லையே மயங்காதே

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
...

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை.. கண்கள்தான் பட்டுவிடுமே
பாடடி பாசக் கவிதை.. நெஞ்சம்தான் கெட்டுவிடுமே
என்றைக்கோ எழுதி வைத்தார்.. இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மைதான் முல்லையே.. என்னையே நான் மறந்தேன்

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
...