#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

ஓ.. ஓஓ.. ஓஓஓ.. ஓ ஓஓ.. ஓஹோ..
ஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ ஓ.. ஓஓஓ ஓ.. 
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. இன்னும் உறக்கமென்ன?
பாலே பசுங்கொடியே.. இங்கே வருத்தமென்ன?
...

தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
யாரடி உன்னைப் படைத்தார்? அன்னையும் தந்தையும் இல்லை
கூறடி.. என்னைக் கெடுத்தார் தெய்வமா? நம்பவும் இல்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன?
உண்மைதான் சொல்லடி.. முல்லையே மயங்காதே

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
...

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை.. கண்கள்தான் பட்டுவிடுமே
பாடடி பாசக் கவிதை.. நெஞ்சம்தான் கெட்டுவிடுமே
என்றைக்கோ எழுதி வைத்தார்.. இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மைதான் முல்லையே.. என்னையே நான் மறந்தேன்

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
...

0 மறுமொழிகள்:

Post a Comment