#307 பார்த்துப் பார்த்துக் கண்கள் - நீ வருவாய் என

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: நீ வருவாய் என
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுதியவர்: பா.விஜய்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...

: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...
பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்.. நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திடக் கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்.. அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்.. எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து.. தினம் வழி பார்த்து.. இரு விழிகள் தேய்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
நீ வருவாய் என.. நீ வருவாய் என
...

0 மறுமொழிகள்:

Post a Comment