#33 கேளடி கண்மணி பாடகன் சங்கதி - புதுப்புது அர்த்தங்கள்


படம்: புதுப்புது அர்த்தங்கள்

இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ம்ஹும்ஹும் ம்ஹும்ஹும்.. ஆஹஹா.. ஆஹஹா..
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
...

எந்நாளும்தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடுதான்
நீயென்னைத் தாலாட்டும் தாயல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால்தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போனபோது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ ஆஆஆஆ ஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீயிதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
...

பாடும் நிலாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!!senyum

0 மறுமொழிகள்:

Post a Comment