#256 சேலை கட்டும் பெண்ணுக்கொரு - கொடி பறக்குது

படம்: கொடி பறக்குது
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


பெ: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
: ஓஹோஹோ ஓஹோஹோஹோ.. ஓஹோஹோ ஓஹோஹோ..
...
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
...

பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்
: ஆ.. ஆஆஆ.. ஆஆ.. ஆயிரம் உண்டு என்னோடு மச்சங்கள்
ஆயினும் என்ன நெஞ்சோடு அச்சங்கள்
பெ: ஆனந்தச் சங்கமத்தில் அச்சம் வருமா
பூக்களைக் கிள்ளுவதால் ரத்தம் வருமா
: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
பெ: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்.. கண்களுக்குள் பள்ளி கொண்டேன்
...

: ஓ.. ஓஓஓ ஓஓ.. காதல் வெண்ணிலா கையோடு வந்ததோ
கண்கள் ரெண்டுமே கச்சேரி பண்ணுதோ
பெ: ஓ.. ஓஓஓ ஓஓ.. மோக மந்திரம் கண்ணோடு உள்ளதோ
மூடு மந்திரம் பெண்ணோடு உள்ளதோ
: மீனுக்குத் தூண்டிலிட்டால் யானை வந்தது
மேகத்தைத் தூது விட்டால் வானம் வந்தது
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை

பெ: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா.. கண்டவர்கள் சொன்னதுண்டா
: சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு
கண்டு கொண்டேன்..  ihikhikகண்களுக்குள் பள்ளி கொண்டேன்
பெ: வானத்து இந்திரரே வாருங்கள் வாருங்கள்
: பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்
பெ: இதுபோல் இதமோ சுகமோ உலகத்தில் இல்லை
: இவளின் குணமோ மணமோ மலருக்குள் இல்லை
...

0 மறுமொழிகள்:

Post a Comment