#287 செம்பூவே பூவே உன் மேகம் நான் - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: இமைகளும் உதடுகளாகுமோ..
பெ: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

: அந்திச் சூரியனும் குன்றில் சாய.. மேகம் வந்து கச்சையாகக்
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெ: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
பெ: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெ: கட்டிலும் கால் வலி கொள்ளாதோ.. கைவளை கைவளை கீறியதோ

: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

பெ: இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
: அந்தக் காமனம்பு என்னைச் சுட்டு.. பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்.. சேலைப் பொன் பூவே
பெ: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெ: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
: பாயாகும் மடி.. சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே

பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: இமைகளும் உதடுகளாகுமோ..
: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

0 மறுமொழிகள்:

Post a Comment