#174 மணியே.. மணிக்குயிலே - நாடோடித் தென்றல்

படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, மனோ & எஸ்.ஜானகி


ஆ1: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளம் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் மணியழகே.. ihikhik
...

ஆ2: மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
...

ஆ2: பொன்னில் வடித்த சிலையே.. பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே..
பெ: எண்ண இனிக்கும் நிலையே.. இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
ஆ2: கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனைத் தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
பெ: பெண்ணிவளை ஆதரித்து பேசித் தொட்டுக் காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலியே
ஆ2: சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
ஆ2: கொடியே.. கொடி மலரே.. கொடியிடையின் நடையழகே
பெ: தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
...

பெ: ஆ.. ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ..
ஆஆ ஆஆஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ.. ஆ..
...

பெ: கண் இமைகளை வருத்தி.. கனவுகளைத் துரத்தி
நின்மனதினால் முடித்த மூக்குத்தி
ஆ2: என் உயிரிலே ஒருத்தி.. கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக் கொண்ட மூக்கித்தி
பெ: கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்
ஆ2: சூட மலர் மாலை கொண்டு.. தூபமிட்டு.. தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்
பெ: அந்தி வரும் நேரமம்மா.. ஆசை விளக்கேற்றுதம்மா
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
மணியே.. மணிக்குயிலே.. மாலையிளங் கதிரழகே
தொட்ட இடம் பூ மணக்கும்.. துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆ2: பூமரப் பாவை நீயடி.. இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெ: ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
ஒஒ ஓஓ ஓஓ ஓ.. நாநந நாந நாநநா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment