பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!


படம்: திருமதி பழனிச்சாமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
குத்தால மேகமெல்லாங் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியைக் கொடியிடைதான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
செஞ்சாந்துக் குழம்பெடுத்துத் தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்துக் கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாகப் பிறந்த பல்லாக்கு நீயோ?
ஈரேழு உலகில் ஈடாக யாரோ?
நெஞ்சோடு கூடு கட்டிக் கூவும் குயிலோ?
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நானவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்குத் தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
0 மறுமொழிகள்:
Post a Comment