Showing posts with label பரத்வாஜ். Show all posts
Showing posts with label பரத்வாஜ். Show all posts

324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...

: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் 
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும் 
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் 
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...

பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
: காதல் தந்த நினைவுகளைக்
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகளுண்டு
அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை 
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...



323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...
ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன், என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன், முடியவில்லை
இமய மலையென்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...