Showing posts with label அருண்மொழி. Show all posts
Showing posts with label அருண்மொழி. Show all posts

#272 திருமகள் உன் முகம் காண வேண்டும் - வனஜா கிரிஜா

படம்: வனஜா கிரிஜா
இசை: இளையராஜா
பாடியவர்: அருண்மொழி



திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலம் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலன் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
ஆஆஆ ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..
...

ஒரு துன்பம் நெருங்காமல் ஓட
வரும் இன்பம் நற்செல்வங்கள் கூட
ஒரு துன்பம் நெருங்காமல் ஓட
வரும் இன்பம் நற்செல்வங்கள் கூட

திருமகள் உன் முகம் காண வேண்டும்
உன் வரவால் என் நலன் ஓங்க வேண்டும்
திருமகள் உன் முகம் காண வேண்டும்
கம தநிஸ நிதம தநிஸ
...

#265 நீலக்குயிலே சோலைக் குயிலே - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா


: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

பெ: பாடும் சங்கீதம் கண்ணே உன் மொழி.. பாடாது போனால் வாழாது ஜீவன்
பாசம் அன்போடு கண்டேன் உன் விழி.. வாராது போனால் தாளாது நெஞ்சம்
தாய் போல நானும் தாலாட்டுப் பாட.. தாளாமல் நீயும் கண் மூட
: தாராததெல்லாம் தந்தாக வேண்டும்.. என் அன்னை இப்போது நீதானம்மா

பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

: பூபாளம் பாடும் என் பூந்தென்றலே.. இளநெஞ்சைத் தூண்டும்.. இசை பாட வேண்டும்
பெ: தேடாமல் தேடும் பொன் மீன் கண்களே.. திரை போட்டதின்று.. திசை பார்த்து நின்று
: பொன்னள்ளித் தூவும் பூமாலை நேரம்.. கண்ணே நம் காதல் கல்யாணமே
பெ: மாலை வந்தாலே மார் மீதிலாடும்.. மாறாது.. ஆறாது.. நம் காதல் தேரோட்டம்

: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
: பாடிப் பார்க்கலாம் புதுத் தேவாரம்.. பாடும் பாட்டிலே நீ ஆதாரம்
பெ: நீலக்குயிலே.. சோலைக் குயிலே.. பாடிப் பறக்கும் என் பாட்டுக் குயிலே
...

#126 நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹாரம்

படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா

பெ: லால லாலலா.. லால லால லாலா.. லாலலா.. லாலலா லா..
...
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது.. தேவியிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
...

: பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பார்த்துப் பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பெ: பார்வை செய்த சோதனை.. நாளும் இன்ப வேதனை
: காதல் கொண்ட காமனைக் கண்டுகொண்டு நீயணை
பெ: கூடினேன்.. பண் பாடினேன்.. என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன்.. தள்ளாடினேன்.. உன் தாகம் தீர்க்கலானேன்
: பாலும் தெளிதேனும் பரிமாற நேரம் வந்ததே

பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது.. தேவனிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...

பெ: ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்றபோது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன
: நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
பெ: தோளில் இன்ப நாளிலே ஆடுகின்ற பூவிது
: அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெ: போதும்.. இது போதும்.. இளம் பூவை மேனி தாங்குமா

: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
பெ: இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
: தேவலோகம் வேறு ஏது
பெ: தேவனிங்கு உள்ளபோது
: வேதம் ஓது..
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. ஆ..
: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...

#106 நீதானா நீதானா - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

பெ: ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ ஆ..
...
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

பெ: காவிரியும் வழி மறந்து வேறு திசை நடப்பதில்லை
கன்னியிளம் நினைவுகளைக் காதல் மனம் மறப்பதில்லை
காதல் அலை வீசும் கடல்தான் மனது
காலம்.. பலகாலம் இது வாழுவது
தூங்காமல் என் கண்கள் வாடும் பொழுது
தோள் மீது சாய்ந்தாட ஏங்கியது
நீயின்றி நானேது.. நேசமோடு வாழும் மாது

பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
அன்பே அன்பே.. எந்தன் அன்பே
வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

: கூவி வரும் புதுக் குயிலின் குரல் வழியே ஒரு துயரம்
பாடி வரும் மொழிதனிலே பாதியிலே ஒரு சலனம்
ஓடும் நதி நீரில் மலர் பூப்பதில்லை
உண்மை இதைக் கண்டும் மனம் கேட்பதில்லை
காலங்கள் நேரங்கள் பாலம் அமைக்கும்
கையோடு கையென்று சேரந்திருக்கும்
வாடாதே.. வாடாதே.. வாசம் இந்தப் பூவைத் தேடும்

: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
பெ: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
: அன்பே அன்பே.. எந்தன் அன்பே
பெ: வாழும் ஜீவன் நீதான் அன்பே
துணை நீயே அன்பே
பெ: நீதானா.. நீதானா.. நெஞ்சே நீதானா
: நீயின்றி நானேதான் இங்கே வாழ்வேனா
...

#105 வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...
: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...

பெ: உன்னை விட சொந்தம் எது.. அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது
: கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா
பெ: உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது.. ஏது
: ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது.. ஏது
பெ: இது வானம் என வாழும்.. இனி மாறாது

: வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
...

: சிந்தும் மழைச் சாரல் விழ.. அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர.. சொர்க்கம் அது நேரில் வர
பெ: கன்னம் மது தேனைத் தர.. கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர.. இன்பம் சுகம் இங்கே வர
: எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட.. ஏக்கம் கூட
பெ: என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட.. தூக்கம் ஓட
: அலை போல மனம் ஓட.. புதுப் பண் பாட

பெ: வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ.. தென்றலே.. கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
...

# 104 வராது வந்த நாயகன் - தாலாட்டு பாடவா

படம்: தாலாட்டு பாடவா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & எஸ்.ஜானகி

: முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்
பெ: நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

: கொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்
பெ: உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்
: உன் பார்வை யாவும் நூதனம்.. பெண்பாவை நீயென் சீதனம்
பெ: உன் வார்த்தை அன்பின் சாசனம்.. பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
: அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்தப் பூவனம்

பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
பெ: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...

பெ: லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
லால்லா லலல்ல லால்ல லால்லலா லாலா
...

பெ: கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்
: சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண் மனம்
பெ: இந்நேரம் அந்த நியாபகம் உண்டாக நீயும் காரணம்
: கண்ணார நாமும் காணலாம் செவ்வாழைப் பந்தல் தோரணம்
பெ: என்னாசையும் உன்னாசையும் அந்நாளில்தானே பூரணம்

: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
பெ: வரம் தரும் உயர்ந்தவன்.. கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
: வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்
பெ: தராதரம் புரிந்தவன்.. நிரந்தரம் நிறைந்தவன்
...