Showing posts with label எஸ்.பி.பாலசுப்ரமணியம். Show all posts
Showing posts with label எஸ்.பி.பாலசுப்ரமணியம். Show all posts

326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: திருமதி பழனிச்சாமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

குத்தால மேகமெல்லாங் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியைக் கொடியிடைதான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

செஞ்சாந்துக் குழம்பெடுத்துத் தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்துக் கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாகப் பிறந்த பல்லாக்கு நீயோ?
ஈரேழு உலகில் ஈடாக யாரோ?
நெஞ்சோடு கூடு கட்டிக் கூவும் குயிலோ?

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நானவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்குத் தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...

: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் 
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும் 
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் 
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...

பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
: காதல் தந்த நினைவுகளைக்
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகளுண்டு
அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை 
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...



323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...
ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன், என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன், முடியவில்லை
இமய மலையென்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஓ.. ஓஓ ஓ.. ஓஓஓ.. ஓஓ ஓ..
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

#316 என் காதலே.. என் காதலே - டூயட்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
...
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா? இல்லை போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா? உனை அமுத விஷமென்பதா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா? தடுமாற்றமா? என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா, இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு..
...

#315 மயங்கினேன் மன்னன் இங்கு - சேலம் விஷ்ணு

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீத ராஜன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மணநாளும் வாராதோ.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

ஆசை கடலாக.. நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே

அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது

அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: ஒருதலை ராகம்

இசை: டி. ராஜேந்தர்

எழுதியவர்: டி. ராஜேந்தர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

...

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...

#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

#307 பார்த்துப் பார்த்துக் கண்கள் - நீ வருவாய் என

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: நீ வருவாய் என
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுதியவர்: பா.விஜய்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...

: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...
பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்.. நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திடக் கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்.. அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்.. எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து.. தினம் வழி பார்த்து.. இரு விழிகள் தேய்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
நீ வருவாய் என.. நீ வருவாய் என
...

#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: கேப்டன் மகள்
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா.. கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா.. தெரித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா.. தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா.. தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய்
அதுவா.. அதுவா.. அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய்ப் போனால் உதடு கடிப்பாய்
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ihikhik 
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் ihikhik  இருக்கிறது
...

#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: விடுதலை
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சந்திரபோஸ்

ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஹோஹோ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓ ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஒ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
...
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
...

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

ஆ2: ஓஹோஓ.. ஓஹோஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
...
: மாலையிட்ட மாமன் கூடப் பொண்ணும் இருக்க
மஞ்ச வெயில் வானம் போலக் கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று ஹா.. காத்துக் கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்.. அம்மம்மா.. ஏதோ ஏக்கம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹா..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

: நேற்றிரவு தூங்கும்போது நூறு கனவு
நானணைக்க வந்தாள் அந்த ihikhik நீல நிலவு.. ஹா..
கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப் பொழுது
காணவில்லை நான்தான் கண்ட கன்னியழகு
தேடி எனைத்தான் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

#301 மூங்கிலிலைக் காடுகளே - பெண்மணி அவள் கண்மணி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
...

மாம்பூக்களே மைனாக்களே.. சந்தோஷ வேளைதான்.. சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே.. கல்யாணப் பெண்ணிவள்.. நல்வாழ்த்துக் கூறுங்கள்
காலகாலமாய்த் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண்ணென்ற காவியம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
...

கார்காலமே நீர்த் தூவுமே.. செந்தாழம் பூவுடல் சில்லென்று கூசுமே ihikhik
ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஓடம் போலவே உள்ளங்களாடவே.. ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்.. வாருங்கள்
...

#298 சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆஆஆஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ.. ஆ..

தம்நம்த நம்த நம்தம் நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்.. நம்த நம்தம்.. நம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
...

திருமுகம் வந்து பழகுமோ.. அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ.. அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி..
விழிகள் அழுதபடி.. கரங்கள் தொழுதபடி..
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி
இசை எனும் மழை வரும்.. இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்.. காதலின் வேதங்கள் ஆடிடுமோ.. பாடிடுமோ..
ஆடிடுமோ.. பாடிடுமோ..

ராஜ தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்..
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே..

ஸஸஸஸ நிஸநிஸ நிஸரிஸ நிஸநிஸ
கரிஸநி ரிஸநிஸ பதநிஸ ரி
ரிஸரிக ஸகரிக நிஸரி நிஸரி
ஸநிதப தஸநி ஸநிதப மபதப
ஸா நிஸநி நிஸநி நிஸநி தப
ப மகப நி தஸநி தபமப
ஸரிக ஸரிக நிஸரிகரிகமப கமப கமப மபத பதநி
நித நிஸ ஸநி தநி
பதநி ஸககக ஸநிஸரி.. கரிஸநி.. ஸநித நிதப
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தரிகிடதோம்..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
...

#296 பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


லா.. லாலாலலா.. ஹே.. ஆஹாஹஹா..
ம்.. ம்ஹுஹுஹும்.. ஆஹா.. ஜுஜுஜுஜூ..
லாலாலா.. லாலாலா.. லாலாலா.. லலலா..
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன் hee hee
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
...
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
ம்ஹும்ஹும்.. லால லல ரரரரா..
லலலா லாலலல லாலாலா
whistling
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்..
...

#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...