Showing posts with label வாலி. Show all posts
Showing posts with label வாலி. Show all posts

326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: திருமதி பழனிச்சாமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

குத்தால மேகமெல்லாங் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியைக் கொடியிடைதான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

செஞ்சாந்துக் குழம்பெடுத்துத் தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்துக் கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாகப் பிறந்த பல்லாக்கு நீயோ?
ஈரேழு உலகில் ஈடாக யாரோ?
நெஞ்சோடு கூடு கட்டிக் கூவும் குயிலோ?

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நானவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்குத் தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: சின்னத் தாயி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

நேத்து வெதச்சு வச்ச நேசந்தான்
பூத்துக் கனிஞ்சு வரும் நேரந்தான்
வாராமப் போகாது.. வாடாதே பூந்தேனே
சேராம வாழாது.. தண்ணீரச் செம்மீனே
நம்மூரு கோட்டச்சாமி ஒன்ன என்ன(னை) சேத்தாச்சு
என் ஜோடி நீதானென்று என்றோ எழுதி வச்சாச்சு
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ(ழை) கத்தாழ(ழை) ஆகாது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்ன(னை)ப் பொருத்தவரை காவியம்
எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி
பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர(ரை) மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்
என்னாச(சை) காத்தோடு போகாது
எந்நாளும் என் வாக்குப் பொய்க்காது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா

பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

பெ: வந்தாள் புல்லாங்குழல் வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

#304 ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா - அக்னி நட்சத்திரம்

என் இசைக் கடவுளை அவருடைய 75-வது பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா


: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

: வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது.. நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

ஆ.குழு: பப்பா.. பாபப்பா.. பப்பா.. பாபப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
 & ஆ.குழு: தகதிகி துகுதுகு.. தகதிகி துகுதுகு ஹே..
...

: இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது.. எண்ணம் அசைபோடுது
கண்கள் வலை வீசுது.. காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா.. ஆ.. ஆ..
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா..
...

#180 தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


பெ.குழு: ஓஓ.. ஓஓஓ ஓஓ ஓ..
ஓஓ ஓஓஓஓ.. ஓஓ ஓஓஓஓ.. ஓஓஓ..
...
பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்..
...

: மாமர இலை மேலே..
ஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெ: ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தித் தாலாட்டவோ
: நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: லல்லல்ல லலலல லா..
லல்லல்ல லாலல்லல்லா.. லல்லல்ல லாலல்லா..
...

பெ: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
பெ: மாதுளங்கனியாட.. மலராட.. கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
: தேகம் யாவும் கீதம் பாடும்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

பெ: தூங்காத விழிகள் ரெண்டு
: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
: ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
&பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

#179 நின்னுக்கோரி வர்ணம் - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: சித்ரா


நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

உன்னைத்தான் சின்னப் பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார்.. கட்டிப்பார்.. தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது.. தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சில் ஏங்குது.. ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில்

நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

பெண்ணல்ல.. வீணை நான்.. நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள்.. நீதான் காட்டு
இன்றல்ல.. நேற்றல்ல.. காலம்தோறும்
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம்
வண்ணப் பாவை மோகனம்.. வாடிப் போன தோரணம்
கன்னித் தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம்
உன் நியாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தீயாகக் கொதிக்குது

நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
ஒரு கிளி தனித்திருக்க.. உனக்கெனத் தவமிருக்க
இரு விழி சிவந்திருக்க.. இதழ் மட்டும் வெளுத்திருக்க
அழகிய ரகுவரனே.. அனுதினமும்
நின்னுக்கோரி வர்ணம்.. வர்ணம்..
இசைத்திட என்னைத் தேடி வரணும்.. வரணும்
...

#178 ரோஜாப்பூ ஆடி வந்தது - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி


பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சாச்ச சாச்சா..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: தூருரூருரூருரூ.. தூருரூருரு..
தூருரூரூரூ.. தூருரூரூரூ..
சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நேற்று நீர் விட்டது.. இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ.. நூறு பூப்பூத்தது
சின்னஞ்சிறு பருவம் இன்னும் கொதிப்பதோ
சொல்லிச் சொல்லிப் பொழுதை இன்னும் கழிப்பதோ
தொடு.. தொடு.. தொடாமல் நிலாவின் மேனி நாளெல்லாம் தேய்ந்ததே

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

பெ.குழு: சா.. சச்சா சா.. சா.. சச்சா சா..
...
பெ.குழு: சா.. சாச்ச சாச்சா.. சா.. சசாச்சா சச்சசாச்சா..
பெ: நீயும் அச்சம் விடு.. நூறு முத்தம் இடு
மீத மிச்சம் எடு.. மேலும் சொல்லிக் கொடு
அந்திப் பகல் இரவு சிந்தை துடிக்குது
அந்தப்புற நினைவில் சிந்து படிக்குது
இதோ.. இதோ.. உன்னாலே விடாமல் மோகம் வாட்டுது.. தாங்குமா

பெ: ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
பூவைக் கொஞ்சம் நீ சூடு.. பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசித் தீராது.. ஆசை என்றும் ஆறாது
லவ்.. லவ்.. என்பதா.. சொல்.. சொல்.. மன்மதா
சொன்னால் போதுமா.. தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடி வந்தது.. ராஜாவைத் தேடி வந்தது
...

#177 ஒரு பூங்காவனம் - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி

ஒரு பூங்காவனம்.. புது மனம்
அதில் ரோமாஞ்சனம்.. தினம் தினம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்.. புது மனம்
...

நான் காலை நேரத் தாமரை
என் கானம் யாவும் தேன் மழை
நான் கால் நடக்கும் தேவதை
என் கோயில் இந்த மாளிகை
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும்
என்னோடு தோழி போல பேசிடும்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம்.. புது மனம்
...

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன்
வெண் மேகக் கூட்டம் யாவையும்
என் மெத்தையாக்கித் தூங்குவேன்
சந்தோஷப் பூக்கள் எந்தன் சோலையில்
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்

உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே

ஒரு பூங்காவனம்.. புது மனம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
ஒரு பூங்காவனம்.. புது மனம்
...

#157 ஓம் நமஹா - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

: ம்.. ம் ம்..
ஓம் நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
பெ: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
பெ: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெ: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெ: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
: நூலாடை விலகி விலகி.. நீரோடை பெருகி வடியும் வேளை
பெ: முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்..
...

பெ: செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
: ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
பெ: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
: வெட்கமும் சீக்கிரம் விடைபெற்று போனது
பெ: ஏடென்று இடையும் இருக்க.. நூலொன்று இதயம் எழுதாதோ
: இளமையின் இலக்கணம் எடுத்துச் சொல்லிய இளைய கன்னிக்கு
&பெ: ஓம்..

பெ: நமஹா.. உருகும் உயிருக்கு
ஓம் நமஹா.. உயிரின் உணர்வுக்கு ஓம்..
: ஓம் நமஹா.. உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா.. உறவின் உதவிக்கு ஓம்..
பெ: வான் வழங்கும் அமுதக் கலசம்
வாய் வழியே ததும்பித் ததும்பி வழியுதோ.. ஓஓஓ ஓஓஓ..
: தேன் பொங்கும் தெய்வ வடிவம்
தோள் தழுவித் தலைவன் மடியில் விழுந்ததோ
...

#156 காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & சித்ரா

பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நான்தானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் ஊர் என்ன
பெ2: என்ன
பெ1: என் பேர் என்ன
பெ2: என்ன
பெ1: நாந்தான் யாரு
பெ2: யாரு
பெ1: என் வழி யாரு
பெ2:
பெ1: ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
...

பெ1: எந்நாளும் ஆசைகள் எனை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழி மேல் நீயில்லையோ
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனந்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத்துணை மயக்கியுன்னை பாய் போட நீ வாடா

பெ1: காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நான்தானோ
: பூதப் பேத பிசாச வேதாள
பேயின் ஜம்பம் ஜடம்பம்பம்
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
...

: ராத்திரி நேரப் பூஜைகள் எல்லாம் இப்போ.. இனிமேல்தான்
அருகினில் வருவேண்டி.. ஆசையில் தொடுவேண்டி
குண்டலி ஏற சொக்குர பூஜை இப்போ.. இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான் சுள்ளுன்னு ஏறாதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
நில்லடி மானே.. போக்கிரிப் பெண்ணே.. பெண் பேய் உனை பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே.. அதுதான் அடங்காதா
அடியாத்தி பட் பட் பட் பட்.. விலகாதே.. ஜட் ஜட் ஜட் பட்..
ஓ பெண்ணே.. மயக்கங்கள் எதுக்கு.. நான் கூட..

: காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
நிழலாய்த்தான் ஓட.. ட.. ட.. ட.. நானோ உன் கூட
என் சபலம் வருதா.. நீயும் காட்டுக்குப் புதிதா
நீ மயங்கும் பொழுதா.. நானும் புடிச்சிக்கத் தோதா
ஆஆஆஆ ஆஆஆ.. ஓஓஓஓ.. ஓஓஓ..
காட்டுக்குள்ளே பாட்டுச் சொல்லும் கன்னிப் பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்சச் சொல்லும் சின்னப் பொண்ணு நீதானோ
...

#155 காவியம் பாடவா தென்றலே - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

விளைந்ததோர் வசந்தமே.. புதுச்சுடர் பொலிந்திட
மனத்திலோர் நிராசை ஏன்.. இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாளிலே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்.. கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ..
...

புலர்ந்ததோர் பொழுதிதுவோ.. புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கந்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சியில்லையே

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

#154 விடிய விடிய நடனம் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

காலங்கள் உதயமாகட்டும்.. கவலைகள் விலகி ஓடட்டும்
காட்டாறு நாமல்லவோ.. ஹேஹே..
வா மனிதா உலகை ஆளலாம்.. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
ராஜாதி ராஜாக்கள் போல்..
ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்.. ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம்தானே.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

பாடுங்கள் புதிய கீர்த்தனம்.. எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே.. ஹோஹோ..
ஆடுங்கள் புதிய தாண்டவம்.. அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லை
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம்
ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம்.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தகிட தகதிமி.. தகதிமி தக..
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தாம் தாம் தாம் தாம் தாம்..
...

#153 ஆத்தாடி அம்மாடி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: சித்ரா

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

வானமும் வையமும் கரங்களை இணைப்பதே மழையில்தான்
செடிகளும் மலர்களும் ஈரமாய் இருப்பதே அழகுதான்
மழையும் சாரலும் கிள்ளாமல் கிள்ளவும்
அழகும் ஆசையும் ஆடாமல் ஆடவும்
துள்ளுகின்ற உள்ளமென்ன.. தத்தளிக்கும் மேனியென்ன
வஞ்சியெந்தன் கண்கள் கண்ட தேவலோகம் பூமிதான்

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

என்னவோ எண்ணியே இளையவள் இதயமே ததும்புதா
சிறு சிறு மழைத்துளி சிதறிட சபலந்தான் அரும்புதா
வான தேவனே சல்லாபம் செய்திட
வாயு தேவனே முத்தாட வந்திட
நீர் பூத்த கூந்தலோடு ஊதக்காற்று தழுவும்போது
துள்ளும் பெண்ணின் உள்ளம் நூறு கவிதை சொல்லும்.. ஓஹொஹோ

ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான்
கூத்தாட தூறல்கள் நீர் விட்டுதான்
உருகுதோ.. மருகுதோ..
குழந்தை மனமும் குறும்புத்தனமும் இனிமையே
கொடியிலே அரும்புதான் குளிரும் மழையில் நனையும் பொழுது
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
சொல்லம்மா சொல்லம்மா வெட்கத்திலே.. ஹே..
ஏதேதோ வந்தாச்சோ எண்ணத்திலே
...

#152 ஓ பாபா லாலி - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
...

: நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிப் பாய் மேல் திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத இளம் தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது இந்தத் தாய் மனமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
...

: ஓ.. மேகமே.. ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
ஓ.. குயிலியே பாடி வா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக.. அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய.. வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட நல்ல நாள் வருமே

: ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன் கேளடி.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
: கண்மணி லாலி..
பெ.குழு: ஆ..
: பொன்மணி லாலி
பெ.குழு: ஆ..
: பாடினேன்.. ஓ பாபா லாலி..
பெ.குழு: ஆ..
...

#129 புத்தம் புது பூப்பூத்ததோ - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: ஆ.. ஆஆஆஆ ஆ ஆஆ ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ..
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

: பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் பழி விழுமோ என்றஞ்சும்
பெ: ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம்.. நினைவுகளில் உன் எண்ணம்
: கருணை கொண்டு நீதான் காயம்தன்னை ஆற்ற
பெ: பார்வை கொண்டு நீதான் பாச தீபம் ஏற்ற
: உயிரென நான் கலந்தேன்

பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

பெ: வாழ்வெனும் கோலங்கள் இன்று வரைந்தது உன் பொன்னுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
: கீழ்த்திசை பூபாளமென்று எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
பெ: கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
: தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
பெ: உனக்கென நான் பிறந்தேன்

: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
: வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
பெ: கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

#128 சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
: ஆஆஆ.. வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
: வானிலவை நீ கேளு.. கூறுமென் வேதனை
பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ
: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
: ஆஆஆ ஆ.. மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
: காயங்களும் ஆறாதோ.. நீயெதிர் தோன்றினால்
பெ: உடனே வந்தால் உயிர் வாழும்
: வருவேன்.. அந்நாள் வரக் கூடும்

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

# 79 சின்னத் தாயவள் தந்த ராசாவே - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: எஸ்.ஜானகி


ம்.. ம்ம்.. ம்ம்.. ம்ம்..
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

தாயழுதாளே நீ வர.. நீயழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
விழி மூடாதோ..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

பால்மணம் வீசும் பூமுகம்.. பார்க்கையில் பொங்கும் தாய் மனம்
ஆயிரம் காலம் ஓர் வரம் வேண்டிட வந்த ஓர் வரம்
வெயில் வீதியில் வாடக் கூடுமோ
தெய்வக் கோயிலைச் சென்று சேருமோ
எந்தன் தேனாறே..

சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ.. நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ
சின்னத் தாயவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே
...

#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்.. எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
...

: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
பெ: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
பெ: நீயின்றி ஏது பூ வைத்த மானே
: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

பெ: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானலல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்
: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
பெ: உன் தோளில்தானே பூமாலை நானே
: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெ: இதயம் முழுதும் எனது வசம்

: வா வா அன்பே அன்பே
பெ: காதல் நெஞ்சே நெஞ்சே
: உன் வண்ணம் உன் எண்ணம்
பெ: எல்லாமே என் சொந்தம்
: இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

# 71 பட்டுப் பூவே மெட்டுப் பாடு - செம்பருத்தி

படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: மனோ & எஸ்.ஜானகி

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே..
...

: கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
பெ: காதலன் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப் பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
: இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு.. சுகக் கொடியேற்று
பெ: மன்னவனே.. என் மன்மதனே
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெ: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: பட்டுப் பூவே..
...

பெ: மன்மத பாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
: விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே இந்த வேளையே
பெ: மதிமொழி கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர் மழை தூவி அழைக்குது மஞ்சம்
: சின்னக் கிளி.. என் செல்லக் கிளி
எனைத் தொட்டுத் தொட்டுத் தழுவு

பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
: மீண்டும் மீண்டும் வேண்டும்
அணை தாண்டிப் பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே.. உன்னைத்தானே
சொந்தம் நானே.. சொந்தம் நானே
பெ: பட்டுப் பூவே மெட்டுப் பாடு
: கட்டிக் கலந்தாடிக் கவி பாட வா
&பெ: பட்டுப் பூவே
...