Showing posts with label மலேசியா வாசுதேவன். Show all posts
Showing posts with label மலேசியா வாசுதேவன். Show all posts

#279 சீவி சிணுக்கெடுத்துப் பூவ - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி


: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹே..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

பெ: தேரில் ஏறித்தான் மாமா மாமா.. தேவலோகந்தான் பார்ப்போம்
: தேடிப் பார்க்கலாம் வாம்மா வாம்மா.. தேவ ரகசியம் காப்போம்
பெ: பூட்டிப் பூட்டித்தான் பார்த்தேன் பார்த்தேன்.. கேக்கவில்லையே மனசு
: ஜோடி சேரத்தான் நினைக்கும் நினைக்கும்.. சூடு ஏறிடும் வயசு
பெ: சொப்பனமோ தந்ததொரு தொந்தரவுதான்
: வந்ததடி மன்மதனின் உத்தரவுதான்
பெ: கூடினாப் பிரியாது.. வேறெதும் தெரியாது.. ஹோய்..

: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

: மாலை ஏறத்தான் ஏதோ ஏதோ.. தோணலாச்சுது எனக்கு
பெ: மனசில் உள்ளது ஏதோ ஏதோ.. போட்டுப் பார்க்குறேன் கணக்கு
: ஆஹா.. தூண்டில் போட்டுத்தான் தூக்கி இழுக்குதே.. ஏண்டி நமக்குள்ள வழக்கு
பெ: சேர்ந்துப் படுத்துதான் பேசி முடிச்சதும் வெளுத்துப் போச்சுது கிழக்கு
: அத்தனையும் மொத்தத்துல அள்ளி எடுப்பேன்
பெ: அப்புறமா மத்ததெல்லாம் கேட்டு ரசிப்பேன்
: ஏறுனா இறங்காது.. மனசுதான் கிறங்காது.. ஹோய்..

பெ: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணு
: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நாந்தானே
சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
: மாப்பிள்ளை கையால மாலைதான் நீ வாங்கு
பெ: மன்மதன் போட்டானே மல்லிகைப்பூ பாணந்தான்
: சீவி சிணுக்கெடுத்துப் பூவ முடிஞ்சு வந்த புதுப்பொண்ணே.. ஹா..
பெ: மாலை எடுத்து வந்து சூடி ரசிக்க வந்த மாமன் நீதானே
...

#278 வானமென்ன கீழிருக்கு - வெற்றி விழா

படம்: வெற்றி விழா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன்

ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆ1: தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
...
பெ.குழு: தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததாத தத்தா..
தாததாததத்தா.. ததாததாத தாததத்த தத்தா..
...

ஆ2: காலை மாலை ராத்திரி
ஆ1: தாதாதுதுது..
ஆ2: கட்டில் மீது பாய் விரி
ஆ1: தாதாது..
ஆ2: காமரூப சுந்தரி
ஆ1: ராபாருதுது..
ஆ2: கோடிக் கோடி சங்கதி
ஆ1: ருஜுஜு.. வாடா நண்பனே.. வேளை நல்ல வேளைதான்
வேளை வந்தபின் வேறு என்ன வேலைதான்
ஆ2: மாலை மல்லிகைதான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: சோலை வண்டினம்தான்
ஆ1: பாடாதோ
ஆ2: மஞ்சள் தந்திரந்தான்
ஆ1: தகுதுகுதகுதுதகுது..
ஆ2: மோக மந்திரந்தான்
ஆ1: கூறாதோ.. நேரம் காலம்
ஆ2: ரொம்ப ரொம்ப சாதகம்
ஆ1: ஆ.. சேரும் இங்கே
ஆ2: சின்னப் பெண்ணின் ஜாதகம்
ஆ1&ஆ2: வா வா.. காதல் பாட்டெடுக்க

ஆ2: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ.. ஆட்டமும் பாட்டமும்.
ஆ1: ஹா..
ஆ2: ஹேய் நைனா.. ஓட்டமும் துள்ளலும்
ஆ1: ஹா..
ஆ2: ஹோய் ஹோய்னா.. ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1: வானமென்ன கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: விஜேபுஜாபுஜூ.. விஜேபுஜாபுஜூ..
...

ஆ1: தீயைப் போலக் காயுது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: தணலைப் போலக் கொதிக்குது
ஆ2: தாதாதா..
ஆ1: அம்பு ஒண்ணு பட்டது
ஆ2: தாதாதாதாதா..
ஆ1: ஆதி அந்தம் சுட்டது
ஆ2: தாதாதா.. ஏதோ ஞாபகம்.. மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம் றெக்கை கட்டி ஓடுது
ஆ1: ஆஹா நூலிடைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: ஆளைக் கொல்லுதப்பா
ஆ2: அம்மாடி
ஆ1: நீலத் தாமரைதான்
ஆ2: தகுதுகுதகுதுதகுது..
ஆ1: நெஞ்சை அள்ளுதப்பா
ஆ2: ஆத்தாடி.. வாடா ராஜா..
ஆ1: வாலிபத்தைக் காட்டு நீ
ஆ2: ஆ.. வீணை இங்கே
ஆ1: கையெடுத்து மீட்டு நீ
ஆ1&ஆ2: ஆ.. வா வா.. காதல் பாட்டெடுக்க.. வானமென்ன

ஆ1: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ2: டடாடாவ்டூ.. டடாடாவ்டூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ1: ததாதாவ்டூ.. ததாதாவ்டூ..
ஆட்டமும் பாட்டமும்.. ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்.. ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க
ஆ1&ஆ2: வானமென்ன
ஆ2: கீழிருக்கு.. பூமியென்ன மேலிருக்கு
சொர்க்கலோகம் பக்கம் வந்தது
ஆ1: விஜாபுஜேபுஜூ.. விஜாபுஜேபுஜூ..
தேவ கானம் பாடப் பாட.. தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளந்தட்டுது
ஆ2: ததாதாவ்டூ
ஆ1: ஹா,,
ஆ2: ததாதாவ்டூ..
...

#215 ஏம்மா.. அந்தி மயக்கமா - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

மூடு நல்ல மூடுதான்.. ஹேய்.. போடு சக்கைப் போடுதான்
ஆடு நம்ம கூடத்தான்.. ஆசை வெள்ளம் ஓடத்தான்
வளையணும்.. நெளியணும் பூங்கொடி
குலுங்கணும்.. குதிக்கணும் மாங்கனி
கையும் காலும் ஒண்ணாப் பின்ன
கன்னம் ரெண்டும் பொன்னா மின்ன
மெல்லத்தான் துள்ளத்தான் இன்னும் நான் சொல்லத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு.. ஹேய்..
...

நேத்து ஒரு மாலதி.. இன்று ஒரு மைதிலி
நாளை ஒரு மோகினி.. நாளும் ஒரு காதலி
இது ஒரு தனி வகை ஜாதகம்
இளமையில் புதுப்புது நாடகம்
அன்பே வா வா.. கண்ணே வா வா
வண்டைத் தேடும் வண்ணப் பூவா
கன்னித் தேன் பொங்கத்தான் அள்ளித்தான் உண்ணத்தான்

ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
ஏம்மா.. அந்தி மயக்கமா.. இந்த மாமா வந்த நெருக்கமா
அடி என்னம்மா கண்ணு.. எங்கிட்டே சொல்லு
அடி கொஞ்சம் நான் கொஞ்ச கிட்டத்தான் நில்லு
...

#204 அடி ஆத்தாடி.. நீ போகும் - கடலோரக் கவிதைகள்

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி



: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

பெ: ஆஆஆ ஆ ஆ.. ஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ.. ஆஆஆ ஆஆ..
...

பெ: சொந்தம் என்ன சொந்தம் என்று சொல்லவில்லை அப்போது
: பக்கம் வந்து பார்த்துச் சொல்ல றெக்கை இல்லை இப்போது
பெ: காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வந்து சேரவில்ல
: வார்த்தை வந்து சேர்ந்தபோது வாழ்க்கை ஒண்ணு சேரவில்லை
பெ: பூசைக்காக போன பூவு பூக்கடைக்கு வாராது
: கத்துத் தந்த கண்ணே.. உன்னை குத்தஞ்சொல்லக் கூடாது
மனம் தாங்காது.. ஓ ஓ ஓஓஓஓஓ

பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
...

: கண்ணே.. இது ஊமைக் காதல்.. காத்திருந்து நொந்தேனே
பெ: தண்டனைக்குப் பின்னே நீயும் சாட்சி சொல்ல வந்தாயே
: காத்திருந்து ஆனதென்ன.. கண்ணீர் வத்திப் போனதென்ன
பெ: தேர் முறிஞ்சு போன பின்னே தெய்வம் வந்து லாபமென்ன
: என்ன சொல்லி என்ன பெண்ணே.. என்னைச் சுத்தி ஏகாந்தம்
பெ: பாறாங்கல்லில் முட்டிக் கொண்டு முட்டைக்கென்ன வேதாந்தம்
இனி பூகம்பம்..

: அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
பெ: அடி அம்மாடி.. நான் காற்றில் ஆடும் தீபம் ஆனேனே
: கிளி போகும் வழியோடு உயிர் போகுதிப்போது
விதி போகும் போக்கில் வாழ்க்கை போகுது
அடி ஆத்தாடி.. நீ போகும் பாதை எங்கே பொன் மானே
அடி ஆத்தாடி..
...

# 93 ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
...

: அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
பெ: குடையுமில்லை.. வடையுமில்லை..
கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ புழிய.. தலை துவட்ட நான் வரவா
: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

பெ: மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
: அருவி போல அழுகுறேனே.. அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டாலாகாதோ
பெ: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

# 85 கூடையில கருவாடு - ஒரு தலை ராகம்

படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்

: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
என்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
...

: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..

குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே..
...

#28 காக்கிச் சட்டை போட்ட மச்சான் - சங்கர் குரு

படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.பி.ஷைலஜா

: ஏஹே.. ஏஹே..
பெ: ஏஹே.. ஏஹே..
...
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
ஒங்க வீட்டுத் திண்ணையில அதுக்குத்தானே குத்த வச்சான்
பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
...

பெ: அந்திக்குப் பின்னே சந்திப்பதெங்கே
சிந்திச்சுப் பார்த்தேன் ஒண்ணுமில்ல
: ஆத்துக்கு வடக்க ஐயப்பந்தோப்பு
அதுக்குள்ள வாடி யாருமில்லே.. ஏஹே.. ஏஹே..
பெ: ஹே.. தோப்புக்குள்ள சத்தமிருக்கு.. ஆமா.. நெஞ்சில் அச்சமிருக்கு
: மானே என்ன அச்சம் ஒனக்கு.. மாமன் கிட்ட மச்சமிருக்கு

பெ: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

: விளக்கை அணைச்சா விவரம் என்ன
ஒத்திகை பார்த்தா தப்பு இல்லே
பெ: ஒத்திகை இங்கே உண்மையா போனா
கல்யாணம் நடத்தும் நம்ம புள்ள.. ஏஹே.. ஏஹே..
: ஏய்.. இன்னும் என்னை நம்பவில்லையா
பெ: ம்ஹும்..
: கன்னம் தர எண்ணமில்லையா
பெ: தாலி இன்னும் செய்யவில்லையா.. சேதி சொல்லத் தேதி சொல்லய்யா

: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: ஆ.. கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
: பக்கம் வந்து பக்கம் வந்து பாவி மனசப் பத்த வச்சான்
பெ: எங்க வீட்டுத் திண்ணையில இதுக்குத்தானா குத்த வச்சான்
: காக்கிச் சட்டை போட்ட மச்சான் களவு செய்யக் கன்னம் வச்சான்
பெ: கன்னம் வைக்க வந்த மச்சான் கன்னத்துல கன்னம் வச்சான்
...

#21 தங்கச் சங்கிலி மின்னும் - தூறல் நின்னு போச்சு

படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & எஸ்.ஜானகி

பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

: காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூவேலைகள்.. உன் மேனியில் பூஞ்சோலைகள்
பெ: அந்திப்பூ விரியும்.. அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு கனியும் வரையில் விடியாது திருமகள் இரவுகள்

: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

பெ:ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
: லாலா லாலலாலா.. லாலலால லாலா..
பெ: தன்னோடுதான் போராடினாள்.. வேர்வைகளில் நீராடினாள்
: லாராரரா.. ராராரரா.. ராராரரா.. ராராரரா..
அன்பே ஆடை கொடு.. எனை அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெ: இதழில் இதழால் ஒரு கடிதம் எழுது.. ஒரு பேதை உறங்கிட மடி கொடு

: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
பெ: மலர் மாலை தலையணையாய்.. சுகமே பொதுவாய்
ஒரு வாய் அமுதம் மெதுவாய்ப் பருகியபடி
&பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ
...

#5 நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன் - மாவீரன்

படம்: மாவீரன்
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & சித்ரா



: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

: இட்டதிங்கு சட்டமென்றுதான்.. மானே
எண்ணுவது இன்று இனிக்கும்
கட்டவிழ்ந்த காளைக் கன்றுதான்.. மானே
முட்டும்போது முட்டி வலிக்கும்
சொன்னால் செய்யும் சூரன் நானே
ஊரே பேசும் வீரன்தானே
ராசா வீட்டுக் கண்ணுக்குட்டி ரொம்பத்தானே துள்ளுது
கட்டிப் போட்டுக் காளையத்தான் கிட்ட வந்து முட்டுது
போடி போடி நீயும் இந்தக் காளை கிட்ட மாட்டும்போது

: நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி.. என் சின்னக் கண்மணி
கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தோம்
திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே
நீ கொடுத்தத திருப்பிக் கொடுப்பேன்
எண்ணிக் கொள்ளடி என் சின்னக் கண்மணி
...

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
சின்னக் கண்மணி உன் செல்லக் கண்மணி
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன்னைச் சுற்றி வட்டம் இடுது.. ராஜா
உள்ளம் ஒரு திட்டம் இடுது
தொட்ட இடம் தாளமிடுது.. ராஜா
மற்ற இடம் தத்தளிக்குது
நானா நானா வந்தேன் அன்பே
வம்பாய்க் கொண்டு வந்தாய் இங்கே
ஏழடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா
வாழும் வரை உன்னுடன்தான் வாழுமிந்த ரோஜா
வண்டைப் போலப் பாட்டுப் பாடு
வந்து வந்து ஆட்டம் போடு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
...

பெ: உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து.. ராஜா
என்னை தினம் தொல்லை பண்ணுது
உச்சி முதல் பாதம் வரைக்கும்.. ராஜா
எத்தனையோ மின்னல் மின்னுது
தொட்டால் என்ன வெந்தா போகும்
தீயா சொல்லு எந்தன் தேகம்
ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம்
வாங்கி வாங்கி நீ குடிக்கத் தீருமுந்தன் ஆத்திரம்
யாரும் இல்லை இங்கு இங்கு
என்னை மெல்லக் கொஞ்சு கொஞ்சு

பெ: நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா
முத்தமாக் கொடு.. அத மொத்தமாக் கொடு
கொண்டாட்டம் டம் போட்டால் ஜம்ஜம்
வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம்

பெ: தார டட்டட்டா.. தர ராரட்டட்டட்டா..
டட்ட டகடக டடன்டா
டகுட டட்ட டகடக டடன்டா டகுடன்டா...
...