Showing posts with label 1980's. Show all posts
Showing posts with label 1980's. Show all posts

#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

ஓ.. ஓஓ.. ஓஓஓ.. ஓ ஓஓ.. ஓஹோ..
ஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ ஓ.. ஓஓஓ ஓ.. 
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. இன்னும் உறக்கமென்ன?
பாலே பசுங்கொடியே.. இங்கே வருத்தமென்ன?
...

தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
யாரடி உன்னைப் படைத்தார்? அன்னையும் தந்தையும் இல்லை
கூறடி.. என்னைக் கெடுத்தார் தெய்வமா? நம்பவும் இல்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன?
உண்மைதான் சொல்லடி.. முல்லையே மயங்காதே

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
...

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை.. கண்கள்தான் பட்டுவிடுமே
பாடடி பாசக் கவிதை.. நெஞ்சம்தான் கெட்டுவிடுமே
என்றைக்கோ எழுதி வைத்தார்.. இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மைதான் முல்லையே.. என்னையே நான் மறந்தேன்

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
...

#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஓ.. ஓஓ ஓ.. ஓஓஓ.. ஓஓ ஓ..
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

#315 மயங்கினேன் மன்னன் இங்கு - சேலம் விஷ்ணு

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீத ராஜன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மணநாளும் வாராதோ.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

ஆசை கடலாக.. நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

#314 மாமரத்துக் குயிலு - ராஜா ராஜாதான்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ராஜா ராஜாதான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: மாமரத்துக் குயிலு
...
பெ: பூமஞ்சமிடும் மயிலு
...
பெ: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...
பெ: உன் மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...

: மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பூசும் சின்னப் புள்ள
மாராப்பு காத்தோடு ஆடும்
பெ: கல்யாணத் திட்டமிட்டு
கண்ணாலே வட்டமிட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
: முந்தானைப் பந்தல் இட்டு நான் தூங்கவா
பெ: முன்னூறு முத்தம் ஒன்னா நான் வாங்கவா
: அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
பெ: அங்கமெங்கும் மோகத்தில் தீயாச்சு வா
: அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா

: மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...

: மானுன்னா மானும் இல்லே.. மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
பெ: நானுன்னா நானுமில்ல.. நீயின்னா நீயுமில்ல
நீயின்றி நானிங்கே உண்டோ
: நீ போகும் பாதை எல்லாம் என் பாதைதான்
பெ: நீ பார்க்கும் பார்வை எல்லாம் என் பார்வைதான்
: மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
பெ: கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷந்தான்
 & பெ: சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்

: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா

: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...

#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: ஒருதலை ராகம்

இசை: டி. ராஜேந்தர்

எழுதியவர்: டி. ராஜேந்தர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

...

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...

#310 காதல் என்பது பொதுவொடைமை - பாலைவன ரோஜாக்கள்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros

படம்: பாலைவன ரோஜாக்கள்

இசை: இளையராஜா

எழுதியவர்: கங்கை அமரன்

பாடியவர்: இளையராஜா


ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆ ஆஆஆஆ..

...

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

...


ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு

அந்த வழி போகாத ஆளிங்கு யாரு

புத்தனும் போன பாதைதான்

பொம்பளை என்னும் போதைதான்

அந்த வேகம் வந்திடும்போது

ஒரு வேலி என்பது ஏது

இது நாளும் நாளும் தாகந்தான்

உண்மைய எண்ணிப் பாரடா

இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா


காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

...


#308 ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: இளையராஜா

பெ.குழு: ம்ம் ம்ம்ம்.. ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்.. ம்..
...
: ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

: மாடி வீட்டுக் கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக் கண்ணை ஏங்க விட்டு
இன்னும் ஒன்னைத் தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையே
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யே
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்தப் பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டுச் செஞ்ச மோசமே

: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
...

: தண்ணியில கோலம் போடு
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக் கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் ஐயா
ஆசை வச்சாக் கிடைக்கும் ஐயா
ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...


#304 ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜா - அக்னி நட்சத்திரம்

என் இசைக் கடவுளை அவருடைய 75-வது பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா


: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

: வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
வரவும் செலவும் இரண்டும் இன்றி
வரவும் செலவும் உண்டு
உறவும் பகையும் உலகில் இன்றி
உறவும் பகையும் உண்டு
நெஞ்சம் விளையாடுது.. நித்தம் இசைபாடுது
எங்கும் சுகமானது எங்கள் வசமானது
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
விழியில் தெரியும் அழகு.. எதுவும் இனிமேல் நமது
விடியும் வரையில் கொண்டாட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
...

ஆ.குழு: பப்பா.. பாபப்பா.. பப்பா.. பாபப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்பப பப்பப்..
: பபபப பப்பப்..
ஆ.குழு: பப்ப பப்பா..
 & ஆ.குழு: தகதிகி துகுதுகு.. தகதிகி துகுதுகு ஹே..
...

: இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
இடையும் உடையும் இரண்டும் இன்றி
இடையும் உடையும் உண்டு
மானும் மீனும் இரண்டும் இன்றி
மானும் மீனும் உண்டு
உள்ளம் அலைபாயுது.. எண்ணம் அசைபோடுது
கண்கள் வலை வீசுது.. காதல் விலை பேசுது
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
விழியில் பொங்கும் அருவி
மழலை கொஞ்சும் குருவி
தெருவில் சென்றால் தேரோட்டம்தான்
நிலவும் மலரும் செடியும் கொடியும்
கடலும் நதியும் கவிதை சொல்லும்

: ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
நேற்று இல்லே.. நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே.. கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா.. ஆ.. ஆ..
ராஜா.. ராஜாதி ராஜனிந்த ராஜா.. ஆ..ஆ..
கூஜா.. தூக்காதே வேறு எங்கும் கூஜா..
...

#303 நீலக் குயில்கள் ரெண்டு - விடுதலை

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: விடுதலை
இசை: சந்திரபோஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சந்திரபோஸ்

ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஹோஹோ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓ.. ஓஓஓ ஓஓஓ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: ஓஓஓ ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓஓஒ ஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆ2: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
...
ஆ.குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
...

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹோய்..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

ஆ2: ஓஹோஓ.. ஓஹோஓ..
ஆ.குழு: ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
ஹொய் ஹொய்யா.. ஹொய் ஹொய்யா
...
: மாலையிட்ட மாமன் கூடப் பொண்ணும் இருக்க
மஞ்ச வெயில் வானம் போலக் கண்ணும் சிரிக்க
நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
நேரம் வந்து சேரும் என்று ஹா.. காத்துக் கிடக்க
மாலை மயக்கம் காலை வரைக்கும்.. அம்மம்மா.. ஏதோ ஏக்கம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு.. ஹா..
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

: நேற்றிரவு தூங்கும்போது நூறு கனவு
நானணைக்க வந்தாள் அந்த ihikhik நீல நிலவு.. ஹா..
கண்விழித்துப் பார்த்தேன் நல்ல காலைப் பொழுது
காணவில்லை நான்தான் கண்ட கன்னியழகு
தேடி எனைத்தான் தேவி வரத்தான் நாளெல்லாம் ஏதோ தாகம்

: நீலக் குயில்கள் ரெண்டு.. மாலைப் பொழுதில் இன்று
கூவித் திரியும் தாவித் திரியும்.. ஆயிரம் ஆசைகள் கொண்டு
ஆயிரம் ஆசைகள் கொண்டு
...

#302 அந்த நெலாவத்தான் - முதல் மரியாதை

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா

பெ: அந்த நெலாவத்தான்.. நான் கையில புடிச்சேன்.. என் ராசாவுக்காக..
...
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...

பெ: மல்லு வேட்டி கட்டியிருக்கு.. அது மேல மஞ்ச இன்னும் ஒட்டியிருக்கு
: முத்தழகி கட்டிப் புடிச்சு முத்தங் குடுக்க மஞ்ச வந்து ஒட்டிக்கிருச்சு
பெ: மார்கழி மாசம் பார்த்து மாருல குளிராச்சு
: ம்.. ஏதுடா வம்பாப் போச்சு.. லவுக்கையும் கிடையாது
பெ: சொக்கம்பட்டிச் சேலை கட்டிப் பூத்திருக்கு பூஞ்சோலை
: பூவு ஒண்ணு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால
பெ: எக்குத்தப்பு வேண்டாம்.. ம்ஹும்..
: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன்
: என் ராசாத்திக்காக
...

: ரத்தினமே முத்தம் வைக்கவா.. அதுக்காகப் பட்டனம் போய் வக்கீல் வைக்கவா
பெ: வெக்கத்தையும் ஒத்தி வைக்கவா.. அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா
: ஓடி வா ஓடைப் பக்கம்.. ஒளியலாம் மெதுவாக
பெ: அதுக்குள்ள வேணாமுங்க ஆளுக வருவாக
: காத்தடிச்சா தாங்காதடி மல்லியப்பூ மாராப்பு
பெ: கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு
: அடி போடி புள்ள எல்லாம் டூப்பு

பெ: அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
அந்த நெலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாவுக்காக
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
பெ: கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
: அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக
...

#301 மூங்கிலிலைக் காடுகளே - பெண்மணி அவள் கண்மணி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: பெண்மணி அவள் கண்மணி
இசை: சங்கர் கணேஷ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
...

மாம்பூக்களே மைனாக்களே.. சந்தோஷ வேளைதான்.. சங்கீதம் பாடுங்கள்
நாணல்களே நாரைகளே.. கல்யாணப் பெண்ணிவள்.. நல்வாழ்த்துக் கூறுங்கள்
காலகாலமாய்த் தப்பாத தாளமாய்
காதல் வண்ணமே மங்காத கோலமாய்
பெண்ணென்ற காவியம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
...

கார்காலமே நீர்த் தூவுமே.. செந்தாழம் பூவுடல் சில்லென்று கூசுமே ihikhik
ஆண் பாதியும் பெண் பாதியும் ஒன்றாகும் வேளையில் சம்சார கானமே
ஓடம் போலவே உள்ளங்களாடவே.. ஏரி போலவே வெள்ளங்கள் ஊறவே
ஒன்றான ஜாதகம் பல்லாண்டு வாழணும்

மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்
வானகத்தில் சொர்க்கமில்லை வையகத்தில் உள்ளதென்று
ஜோடியொன்று தேடுதிங்கே பாருங்கள்.. பாருங்கள்
மூங்கிலிலைக் காடுகளே முத்து மழை மேகங்களே
பூங்குருவிக் கூட்டங்களே வாருங்கள்.. வாருங்கள்
...

#300 இந்திரன் வந்ததும் - ஆண் பாவம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆண் பாவம்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


: ஹே வந்தனம் வந்தனம்
ஆ.குழு: வந்தனம் வந்தனம்
: வந்த சனமெல்லாம்
ஆ.குழு: குந்தணும் குந்தணும்
: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
: ஏ..
&ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
எங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
...

: கைலாச நாதன முருகனக் கண்ணால
பார்க்கத்தான் முடியுமா கூறு
அம்பத்தஞ்சு காசு நீ குடுத்துட்டாத் தன்னால
கடவுளப் பார்க்கலாம் பாரு
: காத்தவ
ஆ.குழு: ராயன்
: மதுரை
ஆ.குழு: வீரன்
: திரையில தானே
ஆ.குழு: புரிஞ்சிருக்கு
: காந்தியக் கூட படத்துல தானே இன்னைக்குத் தேசம்
ஆ.குழு: தெரிஞ்சிருக்கு
: அட பசி தூக்கம் பறந்தாச்சு.. பழசெல்லாம் மறந்தாச்சு
கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருக்கு
ஆ.குழு: அட கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டுல குத்தம் குறைஞ்சிருச்சு

: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
&ஆ.குழு: இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
...

: எத்தனையோ மேதைங்க ஞானிங்க வீரங்க
வெள்ளித் திரை தந்தது இங்கே
ஹரிச்சந்திரன் நாடகம் பார்த்துத்தான் காந்தியும்
சத்தியத்தை நம்பினார் அங்கே
கிசு கிசு
ஆ.குழு: போட்டு
: கேள்வி பதில்
ஆ.குழு: போட்டு
: பத்திரிக்கை வந்தா
ஆ.குழு: லாபமுங்க
: வாழ்க்கைக்கு
ஆ.குழு: இங்கே
: வடிகால்
ஆ.குழு: வேணும்
: சினிமா ஒண்ணே
ஆ.குழு: போதுமுங்க
: அட பகலெல்லாம் உழைச்சீங்க இரவெல்லாம் சிரிச்சீங்க
வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்க சினிமாதான்
ஆ.குழு: அட வெள்ளித் திரையில தங்கம் விளைஞ்சது எங்கச் சினிமாதான்

: ஏ.. இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க MGR வந்ததும் NTR வந்ததும் இந்தச் சினிமாதான்
: கலை வளர்ந்ததும்
ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
ஆ.குழு: இங்கேதான்
: கலை வளர்ந்ததும்
&ஆ.குழு: இங்கேதான்
: காதல் சொன்னதும்
&ஆ.குழு: இங்கேதான்
: கட்சி வளர்த்ததும் ஆட்சி புடிச்சதும் இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சதும் இந்தச் சினிமாதான்
ஆ.குழு: கட்சி வளர்த்தது ஆட்சி புடிச்சது இந்தச் சினிமாதான்
அட அமெரிக்காவுல ஆட்சி அமைச்சது இந்தச் சினிமாதான்
: ஹே..
&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
: அட..
&ஆ.குழு: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தானா..
...

#299 ஓ.. எந்தன் வாழ்விலே - உனக்காகவே வாழ்கிறேன்

படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி


ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

பண்ணோடு நாளும் இணையும் தாளம்
என்னோடு வாழ்வில் இணைந்தாய் நீயும்
கல்யாண ராகம் விழிகள் பாடும்
கால் போடும் கோலம் கவிதையாகும்
சந்தோஷத் தென்றல் என் வாழ்வில் வீசும்
என்னாசை நெஞ்சம் ஊர்கோலம் போகும்
அன்பாலே.. அன்பாலே பண் பாடி
உன் நிழலென வருவேன்

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

செந்தாழம்பூவே கதைகள் பேசு
சிங்காரக் காற்றே மெதுவாய் வீசு
என் காதல் தேவன் அருகே வந்தான்
எனக்காகத்தானே இதயம் என்றான்
நானந்த நேரம் நானாக இல்லை
நாணங்களாலே வாய் பேசவில்லை
விழாவே.. விழாவே கொண்டாட
கண் மயங்குது கிளியே

ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
இது இளங்கனவுகள் மலரும் நேரமே
அதில் மனச் சிறகுகள் விரியும் காலமே
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
ஓ.. எந்தன் வாழ்விலே ஒரு பொன் விழா
...

#298 சங்கீத ஜாதி முல்லை - காதல் ஓவியம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஆஆஆஆஆ ஆ.. ஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ..
ஆஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆஆ ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ ஆ ஆ.. ஆ ஆ ஆ..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ.. ஆ..

தம்நம்த நம்த நம்தம் நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்..
நம்த நம்தம்.. நம்த நம்தம்.. நம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
நம்தம்த நம்தம்.. நம்தம்த நம்தம்..
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை
சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே.. வா..
சங்கீத ஜாதி முல்லை.. காணவில்லை
...

திருமுகம் வந்து பழகுமோ.. அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ.. அது சுடுவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி.. கன்னி நதி.. ஜீவ நதி..
விழிகள் அழுதபடி.. கரங்கள் தொழுதபடி..
சிறைகளும் பொடிபட வெளி வரும் ஒரு கிளி
இசை எனும் மழை வரும்.. இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள்.. காதலின் வேதங்கள் ஆடிடுமோ.. பாடிடுமோ..
ஆடிடுமோ.. பாடிடுமோ..

ராஜ தீபமே.. எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே.. குயிலே..
குயிலே.. குயிலே..
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்..
ராஜ தீபமே..

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷமென்ன
ராஜ தீபமே..

ஸஸஸஸ நிஸநிஸ நிஸரிஸ நிஸநிஸ
கரிஸநி ரிஸநிஸ பதநிஸ ரி
ரிஸரிக ஸகரிக நிஸரி நிஸரி
ஸநிதப தஸநி ஸநிதப மபதப
ஸா நிஸநி நிஸநி நிஸநி தப
ப மகப நி தஸநி தபமப
ஸரிக ஸரிக நிஸரிகரிகமப கமப கமப மபத பதநி
நித நிஸ ஸநி தநி
பதநி ஸககக ஸநிஸரி.. கரிஸநி.. ஸநித நிதப
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தகதிமிதோம்..
தகதகதோம்.. தரிகிடதோம்.. ததிங்கினதோம்.. தரிகிடதோம்..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
மகண யகண ரகண சகண.. யகண ரகண சகண தகண..
ரகண சகண தகண பகண.. சகண தகண பகண ககண..
...

#297 காதல் உன் லீலையா - ஜப்பானில் கல்யாணராமன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஜப்பானில் கல்யாணராமன்
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

லாலா லாலா லாலா லால லாலா.. லாலலா..
லாலா லாலா லாலா.. லாலா லாலலா..
காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...

வெள்ளை நிலா வானில் வந்தால் வீதி எல்லாம் பொன்னாகும்
கண்ணுக்குள்ளே காதல் வைத்தாய்.. கந்தல் மனம் என்னாகும்
ஆதாமிடம் ஏவாளும் அள்ளித் தந்தாள் எந்நாளும்
இன்னும் மிச்சம் ஏராளம்.. எங்கே உந்தன் தாராளம்
கண்கள் ரெண்டும் காமன் குளம்

இந்தக் காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
...

ஜப்பான் என்னும் தேசத்திலே பகல் பொழுதும் ராத்திரிதான்
கோதை இவள் கூட வந்தால் கோப்பைக்குள்ளே யாத்திரைதான்
வெட்கம் இன்று தீராதா.. முத்தம் சுதி சேராதா
அச்சம் என்னும் கடல் தாண்டிப் பெண்மை கரை ஏறாதா
முன்னும் பின்னும் இல்லாததா

அட காதல் உன் லீலையா.. இளங்காமன் உன் வேலையா
உள்ளுக்குள்ளே கள்ளூருதே.. தங்கக் கிண்ணம் தள்ளாடுதே
முத்தம் என்னும் யுத்தம் செய்யும்
இந்தக் காதல் உன் லீலையா.. காமன் உன் வேலையா
...

#296 பல்லவி இல்லாமல் பாடுகிறேன் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


லா.. லாலாலலா.. ஹே.. ஆஹாஹஹா..
ம்.. ம்ஹுஹுஹும்.. ஆஹா.. ஜுஜுஜுஜூ..
லாலாலா.. லாலாலா.. லாலாலா.. லலலா..
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்
பாதை இல்லாமல் ஓடுகிறேன்
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன் hee hee
ஊமைக் காற்றாய் வீசுகிறேன்
உறங்கும்போது பேசுகிறேன்
இந்த ராகம் தாளம் எதற்காக
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
...
உயிரே உனக்காக.. உயிரே உனக்காக..
ம்ஹும்ஹும்.. லால லல ரரரரா..
லலலா லாலலல லாலாலா
whistling
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்
ம்ஹுஹும்.. ம்ஹும்ம்ம் ம்ம்ம்..
...

#295 பன்னீரில் நனைந்த பூக்கள் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்கள்: எஸ்.ஜானகி & குழுவினர்

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ&பெ.குழு: பொன் மேகம்
பெ: சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: நானும் ஓர் தென்றல்தான்.. ஊரெல்லாம் சோலைதான்
எங்குமே ஓடுவேன்
நதியிலே நீந்துவேன்.. மலர்களை ஏந்துவேன்
எண்ணம் போல் வாழுவேன்
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
இளமைக் காலம் மிக இனிமையானது
உலகம் யாவும் மிகப் புதுமையானது
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: பொங்கும் போதைதான்.. எங்கும் மாயம்தான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: எல்லாம் தேவனின் சொந்தம்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஒன்றே ஜாதிதான்.. ஒன்றே நீதிதான்..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: என்றும் ஆனந்தம் தம் தம் தம் தம் தம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே
பெ&பெ.குழு: பன்னீரில்
பெ: நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க.. பார்த்து ரசித்தேன்
...

பெ: மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே
சுதந்திரம் இல்லையே
விடுதலை கிடைத்தது.. வாசலும் திறந்தது
பறந்தது கிள்ளையே
தந்தனத் தானத்தன தந்தனத் தானனா..
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்
எளிமையான அந்த இறைவன் ஆலயம்
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி.. ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரி ஓம் ஹரி..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே மாதவா.. ஹரே ஶ்ரீதரா..
ஆ.குழு: ஓம்..
பெ.குழு: ஹரே ராகவா.. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்..

பெ: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
வசந்தம் வரும் காலம்.. விழியில் வண்ணக் கோலம்
கூக்கூ.. குக்குக்கூ.. கூக்கூ குக்குக்கூ..
சத்தங்கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே

பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆஆ.. ஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆஆஆ.. ஆஆஆஆ ஆ..
பெ.குழு: பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க
பெ: ஆ ஆஆஆ..
பெ.குழு: பொன் மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க
பெ: ஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆ..
...

#294 தேனூறும் ராகம் - உயிரே உனக்காக

படம்: உயிரே உனக்காக
இசை: லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால்
பாடியவர்: எஸ்.ஜானகி


ஆரிராரோ.. ஆரிராரிரோ.. ஆரிராரோ.. ஆரிராரிரோ..
தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஆடாத தீபந்தான் என் இல்லம்
பூங்காற்றுக்கும் தாங்காது என்னுள்ளம்
உன் அன்பாலே பொங்காதோ ஆனந்த வெள்ளம்
கனவுகளே.. கனவுகளே..
இரவென்னும் தீபம் எரிகின்ற நேரம்
உறவைத் தேடி வாருங்கள் கண்களில்
தென்றல் வீசும்.. கண்ணுறங்கு
உன்னை நீயே மறந்துறங்கு

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
ராரிராரோ.. ஆரிராரிரோ..
கண்ணின் மணியே நீயும் உறங்கு
...

ஷ்ஷ்ஷ்..don't tell anyone
...

ஆகாயம் மண் மீது வீழாது
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது
இனி என் போன்ற அன்னைக்கு ஏகாந்தம் ஏது
உறவுகளால் ஒரு உலகம்
இது ஒரு தோட்டம்.. கிளிகளின் கூட்டம்
ஆட்டம் பாட்டம் ஆர்ப்பாட்டம் கேட்கலாம்
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்

தேனூறும் ராகம் நான் பாடும் நேரம்
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே
கண்ணின் மணியே நீயும் உறங்கு
கண்ணின் மணியே நீயும் உறங்கு
ஆரிராரோ.. ம்ஹுஹுஹுஹும்..
ம்ஹுஹுஹும்.. லாலாலாலலா..

#293 மழையின் துளியில் - சின்னத்தம்பி பெரியதம்பி

படம்: சின்னத்தம்பி பெரியதம்பி
இசை: கங்கை அமரன்
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: சித்ரா


மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...

ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
ஆகாயம் அங்கும் இங்கும் ஆயிரமாயிரம் பூக்கோலம்
தாழ்வாரம் எங்கும் வண்ணம் தங்கம் மின்னும் மாக்கோலம்
பூவோடு பூங்காற்றும் பூபாளம் பாடாதோ
பெண்ணான என்னுள்ளம் பூப்போல ஆடாதோ
பாசமெனும் கூட்டில் பல பாடம் பெறும் கிளிகள்
பாடி வரும் பாட்டில் பல பாவம் பெறும் மொழிகள்
நாதமென்று கீதமென்று சேர்ந்தது வழிகள்

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
...

ஆ ஆஆ.. ஆஆ ஆஆஆ..
லலலலலல லலலலலல லா லா லா லா..
...

அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
அன்பான நெஞ்சம் எல்லாம் ஆண்டவன் வாழும் கோவிலது
யாரோடு யாரைக் கண்டு சங்கமமாகப் போகிறது
எந்நாளும் சங்கீதம் நம்மோடு ஒன்றாகும்
எப்போதும் சந்தோஷம் நம்மோடு வந்தாடும்
வானம் எங்கும் பறந்து நாம் தேடும் இளம் வயது
சோகங்களை மறந்து இது ராகம் தரும் மனது
சேர்ந்ததென்று பாடுதம்மா.. ஆனந்தம் எனது

மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
மலரின் இதழில் பனி விழுந்தது
மயங்கி மயங்கி மலர் எழுந்தது மாமா.. என் மாமா..
தூவானம் தூவும்.. அதில் ஏதேதோ கானம்
ஆராரோ பாடும்.. அதில் ஆனந்தம் கூடும்
மழையின் துளியில் லயமிருக்குது
துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா.. என் மாமா..
...