Showing posts with label கே.ஜே.ஏசுதாஸ். Show all posts
Showing posts with label கே.ஜே.ஏசுதாஸ். Show all posts

#270 காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே - உள்ளம் கவர்ந்த கள்வன்

படம்: உள்ளம் கவர்ந்த கள்வன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: குயில் கூவத் துயில் பறந்து குயிலொன்று எழுந்து வந்து
பயிலாத பாடமொன்றை பயிலச் சொல்லிச் சென்றதம்மா
வயதாக வயதாக இது படியாது.. பயிலாது
கயல் கொண்ட விழியாளே.. இங்கு இயலோடு இசையாக..
காலங்காத்தாலே ஒரு பாடங்கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: என்ன பாடம்.. அது என்ன பாடம்
: காதல் பாடம்.. அது காதல் பாடம்
பெ: ஓஹோஹோஹோ.. காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: எப்போ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஓஹோஹோஹோ..
...

பெ: தாவணியைப் போட்டால் போதும்.. கனவுகள்தான் பின்னால் சுற்றும்
தனியாகப் போனால் போதும்.. நினைவுகள்தான் தன்னால் சுற்றும்
பேசாமல் இருக்கும் நிலவைப் பெண்ணுக்கு உவமை சொல்லும்
கூசாமல் தென்றல் காற்றை தூதாகப் போகச் சொல்லும்
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
ஒழுங்காக இருந்த உன்னைக் கெடுத்தது யார்.. சொல் சொல் பையா
போகுது போகுது வாலிபந்தான்.. வேலையைப் பார்.. சீக்கிரம் சீக்கிரம்

பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
போதும் போதும்
: ஓஹோஹோஹோ
பெ: நீ கேட்ட பாடம்
: ஆஹாஹாஹா
பெ: ஆகும் ஆகும்
: ஓஹோஹோஹோ
பெ: ரொம்ப காலம் காலம்
: ஆஹாஹாஹா
...

&பெ: லாலலாலலாலா.. லாலலாலலா.. லாலலாலலாலா.. லாலலாலலா..
லாலலாலா.. லாலலாலா.. லாலலாலலா..
...

: வகுப்பறையில் கேட்கும் பாடம் வயதானால் போகும் போகும்
குளிப்பறையில் பாடும் பாடல் போலேதான் ஆகும் ஆகும்
தனியாகச் சொல்லும் பாடம்.. இதுதானே வேணும் வேணும்
துணையாக ஆக்கும் பாடம்.. அது ஒன்றே போதும் போதும்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
இளமையிலே கல் கல் காதல்.. வயதினிலும் செய் செய் காதல்
போகுது போகுது வாலிபந்தான்.. சீக்கிரம் நீ சொல்லடி சொல்லடி

: காலங்காத்தாலே ஒரு பாடம் கேட்பேனே
நீ சொல்லித் தந்தால் போதும் என் கல்லூரிப் பொன்மானே
பெ: காலங்காத்தாலே ஒரு வேலை இல்லாமே
சிறு கல்லூரிப் பெண் பின்னால் சுற்றும் காதல் சின்னவனே
: காதல் பாடம்.. சொல் காதல் பாடம்
பெ: ம்ஹும் ம்ஹும்.. ம்ஹும் ம்ஹும் ம்ஹும்..
...

#266 பூவாடைக் காற்றே - மை டியர் குட்டிச்சாத்தான்

படம்: மை டியர் குட்டிச்சாத்தான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ், இளையராஜா & குழுவினர்


பெ.குழு: தா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா.. தகதா..
தகதக தகதக தகதக தகதகதா..
...
ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
சொர்க்கத்தை மண் மீது காண்கின்றோம் இப்போது
ஓடும் மேகங்களே.. உடைகளாகுங்களே
ஓடும் மேகங்களே.. சொல்லுங்களே
உடைகளாகுங்களே.. நில்லுங்களே
வசந்தமெங்கள் வாழ்விலே
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

ஆ1: ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
ஆஹாஹா ஆனந்தம்.. பூலோகம் பூமஞ்சம்
இன்பம் எங்கும் கொள்ளை.. அள்ளக் கைகள் இல்லை
இன்பம் எங்கும் கொள்ளை.. யாரும் இல்லை
அள்ளக் கைகள் இல்லை.. நேரம் இல்லை
குழந்தை செய்த சாதனை
ஆ2: ஏ.. தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதகதா..

ஆ1: பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
பழகும்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: கிளிகள்
பெ.குழு: லல்லல்லா
ஆ1: பழகும் கிளிகள் இன்று பறக்கின்றதே
சிறகை விரித்து விண்ணை மறைக்கின்றதே
பூவாடைக் காற்றே.. சுகம் கொண்டு வா
பனி நீராடும் பூவே.. மணம் கொண்டு வா
...

#242 அன்பே வா அருகிலே - கிளிப்பேச்சு கேட்க வா

படம்: கிளிப்பேச்சு கேட்க வா
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்



ஓ.. ஒ ஒ ஓ.. ஓ.. ஒ ஒ ஓ..
ம் ம்ம்.. ம் ம்ம்.. ம் ம்ம்..
...
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன்தானோ
மின்னலென மின்னிவிட்டுக் கண்மறைவாய்ச் சென்றுவிட்ட
மாயம் நீதானோ
உன்னால் வந்த காதல் உன்னால்தானே வாழும்
என்னை நீங்கிப் போனால் உன்னைச் சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

உள்ளத்துக்குள் உள்ளிருந்து மெல்ல மெல்லக் கொல்லுவது
காதல் நோய்தானோ
வைகையெனப் பொய்கையென மையலிலே எண்ணியது
கானல் நீர்தானோ
என்னை நீயும் தூண்ட.. எண்ணக் கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட உன்னைத்தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம் வழங்குமோ உன் இதயமே

அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை.. எங்கே என் தேவதை தேவதை
நீதானே வேண்டுமென்று ஏங்கினேன்
நாள்தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே.. என் வாசல் வழியிலே
...

#238 கல்யாணத் தேன் நிலா - மௌனம் சம்மதம்

படம்: மௌனம் சம்மதம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா



: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா.. உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
...

: தென்பாண்டிக் கூடலா.. தேவாரப் பாடலா
தீராத ஊடலா.. தேன் சிந்தும் கூடலா
பெ: என்னன்புக் காதலா.. என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா.. நீ தீண்டும் கையிலா
: பார்ப்போமே ஆவலா.. வா வா நிலா..

பெ: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
: நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
...

பெ: உன் தேகம் தேக்கிலா.. தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா.. நான் கைதிக் கூண்டிலா
: சங்கீதம் பாட்டிலா.. நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா.. உன் பார்வை தன்னிலா
பெ: தேனூறும் வேர்ப்பலா உன் சொல்லிலா..

: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா.. என்னோடு வா நிலா
பெ: தேயாத வெண்ணிலா.. உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
: கல்யாணத் தேன் நிலா.. காய்ச்சாத பால் நிலா
...

#218 தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

: தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
பெ: சாரல் பாடும் சங்கீதம்.. கால்கள் தாளம் போடும்
: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெ: நனைந்த பிறகு நாணம் எதற்கு
: மார்பில் சாயும்போது

பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

&பெ: தரரத் தரரத் தரரா.. தரரத் தரரத் தரரா..
...
&பெ: தரரத் தரரத் தரரத் தரரத் தரரத் தரராரா..
...

பெ: தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
: மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
பெ: மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
: இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
பெ: சாரம் ஊறும் நேரம்

: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...

#217 கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்- தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்


பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: கள்ளிருக்கும்..                           பெ: பூவிது.. பூவிது
: கையணைக்கும்..                     பெ: நாளிது.. நாளிது..
: பொன்னென மேனியும்..        பெ: மின்னிட.. மின்னிட..
: மெல்லிய நூலிடை..               பெ: பின்னிடப் பின்னிட..
: வாடையில் வாடிய..               பெ: ஆடையில் மூடிய..
: தேன்..                                                பெ: நான்..

: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
: பொன்னழகே.. பூவழகே.. என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: பெண் மயங்கும்..                    பெ: நீ தொட.. நீ தொட..
: கண் மயங்கும்..                        பெ: நான் வர.. நான் வர..
: அங்கங்கு வாலிபம்..              பெ: பொங்கிடப் பொங்கிட..
: அங்கங்கள் யாவிலும்..        பெ: தங்கிடத் தங்கிட..
: தோள்களில் சாய்ந்திட..      பெ: தோகையை ஏந்திட..
: யார்?                                                  பெ: நீ..

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
...

#213 முத்தமிழ்க் கவியே வருக - தர்மத்தின் தலைவன்

படம்: தர்மத்தின் தலைவன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா


பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊஊ.. ஊ..
...
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக
...

பெ: காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நானாடுவேன்
: கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
பெ: மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
தேனோடு நீயாட ஓடோடி வா
: காணாத ஸ்வர்க்கங்கள் நாம் காணத்தானே
பூந்தென்றல் தேரேறி நீ ஓடி வா
பெ: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

: ஆஆ.. முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

பெ.குழு: ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ.. ஊஊ ஊஊ.. ஊ ஊஊஊ..
ஊஊ.. ஊஊ.. ஊ..
...
: சந்தம் கொள்ளும் தமிழ்க் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம்.. ஒரு ராகம் சிந்து
பெ: நெஞ்சம் எந்தன் மஞ்சம்.. அதில் அன்பைத் தந்து
தந்தோம் தந்தோம் என்று புதுத் தாளம் சிந்து
: வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்
நானாட ஒரு மேடை நீ கொண்டு வா
பெ: என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா
: காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்.. இன்பம் கோடி..
ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆ..

பெ: ஆஆ.. முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: காதலெனும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது
பெ: முத்தமிழ்க் கவியே வருக.. முக்கனிச் சுவையே வருக
: முத்தமிழ்க் கலையே வருக.. முக்கனிச் சுவையும் தருக.. ஹோ..
...

#192 வான மழை போலே - இது நம்ம பூமி

படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்


ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம்.. ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம்..
ம்ஹும்.. ம்ம்ம்.. ம் ம் ம் ம்..
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும்
இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும்
கொதிக்கும் பாலையிலும் இசையால் பூ மலரும்
இரும்புப் பாறையிலும் இசையால் நீர் கசியும்
பழி வாங்கும் பகை நெஞ்சும் இசையால் சாந்தி பெறும்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

மா.. கம தநிதா.. கம கதநி..
தநி ஸாநி நிப பக கஸ ஸநி நித
தஸா மதா நி பா க ஸா
...
குரலில் தேன் குழைத்துக் குயிலைப் படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால் இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்.. அரங்கம் தேவையில்லை
சபையில் பேரெடுக்கக் குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்

வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது.. நெடு நாள் வாழும் இது
வான மழை போலே புதுப் பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
...

#180 தூங்காத விழிகள் ரெண்டு - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


பெ.குழு: ஓஓ.. ஓஓஓ ஓஓ ஓ..
ஓஓ ஓஓஓஓ.. ஓஓ ஓஓஓஓ.. ஓஓஓ..
...
பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்.. ம்ம்ம் ம்ம்..
...

: மாமர இலை மேலே..
ஆஆஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ..
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழிப் பனி போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
பெ: ராத்திரி பகலாக ஒரு போதும் விலகாமல்
ராஜனைக் கையேந்தித் தாலாட்டவோ
: நாளும் நாளும் ராகம் தாளம்
சேரும் நேரம் தீரும் பாரம்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

பெ.குழு: லல்லல்ல லலலல லா..
லல்லல்ல லாலல்லல்லா.. லல்லல்ல லாலல்லா..
...

பெ: ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலையென்னவோ
: ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேறும் கதையல்லவோ
பெ: மாதுளங்கனியாட.. மலராட.. கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
: வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ
பெ: மேலும் மேலும் மோகம் கூடும்
: தேகம் யாவும் கீதம் பாடும்
பெ: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ..
: ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

பெ: தூங்காத விழிகள் ரெண்டு
: உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
பெ: செம்பூமஞ்சம் விரித்தாலும்.. பன்னீரைத் தெளித்தாலும்
: ஆனந்தம் எனக்கேது.. அன்பே நீ இல்லாது
&பெ: தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
...

#151 ராமனின் மோகனம் - நெற்றிக்கண்

படம்: நெற்றிக்கண்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

பெ: இடமும் வலமும்.. இரண்டு உடலும் மனமும்
: ஓஓஓஓஓ..
பெ: இணைந்தோங்கி நிற்கும்போது இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
: ஒரு கோவில் மணியின் ராகம்..
பெ: லலல லலல லலல லலலலா..
: ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாளின்றுதான் கண்களே

பெ: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.. ஹோஓ..
: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
...

: இடையும் கொடியும்.. குலுங்கும் நடையும் மொழியும்
பெ: ஹாஆஆஆஆ
: எடை போட கம்பன் இல்லை.. எனக்கந்த திரனும் இல்லை
இலை மூடும் வாழைப் பருவம்
பெ: மடி மீது கோவில் கொண்டு..
: லலல லலல லலல லலலலா..
பெ: மடி மீது கோவில் கொண்டு
மழைக்காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்

: ராமாயணம்.. பாராயணம்.. காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு..
பெ: ராமனின் மோகனம்.. ஜானகி மந்திரம்
&பெ: லாலலா லாலலா.. லாலலா லாலலா..
...

#139 நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

பெ: வானப் பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்
பெ: மஞ்சள் மணக்கும்.. என் நெத்தி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
: மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னேலே
பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்.. இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
: ஸ்வர்க்கம் எதற்கு.. என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு.. கண்ணே வா
பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான்.. அன்பே வா..
: சுமையானது ஒரு சுகமானது.. சுவை நீதான்

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

#133 ராஜ ராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி

படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

கண்ணோடு கண்களேற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும்போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசைத் தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம்.. என் காதல் வாகனம்
செந்தாமரை.. செந்தேன் மழை.. என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

கள்ளூரப் பார்க்கும் பார்வை உள்ளூரப் பாயுமே
துள்ளாமல் துள்ளுமுள்ளம் சல்லாபமே
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே
தேனோடை ஓரமே.. நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே.. பொன் மேனி.. கேளாய் ராணி..

ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு உண்டானதே
ராஜ ராஜ சோழன் நான்.. எனை ஆளும் காதல் தேசம் நீதான்
பூவே.. காதல் தீவே
...

#129 புத்தம் புது பூப்பூத்ததோ - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: ஆ.. ஆஆஆஆ ஆ ஆஆ ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ..
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

: பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் பழி விழுமோ என்றஞ்சும்
பெ: ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம்.. நினைவுகளில் உன் எண்ணம்
: கருணை கொண்டு நீதான் காயம்தன்னை ஆற்ற
பெ: பார்வை கொண்டு நீதான் பாச தீபம் ஏற்ற
: உயிரென நான் கலந்தேன்

பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

பெ: வாழ்வெனும் கோலங்கள் இன்று வரைந்தது உன் பொன்னுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
: கீழ்த்திசை பூபாளமென்று எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
பெ: கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
: தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
பெ: உனக்கென நான் பிறந்தேன்

: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
: வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
பெ: கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...

#127 மழை வருது.. மழை வருது - ராஜா கைய வெச்சா

படம்: ராஜா கைய வெச்சா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: லாலால லாலால லாலா. லாலால லாலாலலா..
லாலா லாலாலலா.. லலல லாலா லாலாலலா..
...
: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே
...

பெ: இரவுமில்லை
: பகலுமில்லை
பெ: இணைந்த கையில்
: பிரிவுமில்லை
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
: நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
பெ: சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்
உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும்.. கண்ணா.. வா..

: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே.. ஹொய்
பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே
: மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே.. ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...

: கடந்த காலம்
பெ: மறந்து போவோம்
: கரங்கள் சேர்த்து
பெ: நடந்து போவோம்
: உலகமெங்கும் நமது ஆட்சி
பெ: நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
: உலகமெங்கும் அதற்கு சாட்சி
இளைய தென்றல் தாலாட்டு பாடும்.. இனிய ராகம் கேட்கும்.. வா..

பெ: வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
மன்னா உன் பேரன்பிலே.. ஹொய்
: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
மழை போல் நீயே பொழிந்தாய் தேனே
பெ: மழை வருது.. மழை வருது.. குடை கொண்டு வா
: மானே உன் மாராப்பிலே ஹொய்
வெயில் வருது.. வெயில் வருது.. நிழல் கொண்டு வா
பெ: மன்னா உன் பேரன்பிலே
...

# 115 எங்கெங்கு நீ சென்ற போதும் - நினைக்கத் தெரிந்த மனமே

படம்: நினைக்கத் தெரிந்த மனமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது காயங்களும் ஆறியதேன்
பெ: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன்னுறவே
நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும் மயங்குவதேனோ என் மனதே
: இரு நெஞ்சின் துன்பம்.. இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

பெ: மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்.. மாங்குயிலே.. மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்.. கண்மணியே.. கண்மணியே
: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்.. சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்.. கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெ: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
&பெ: லாலால லாலால லாலா.. லாலால லாலால லாலா..
...

# 113 A B C.. நீ வாசி - ஒரு கைதியின் டைரி

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & வாணி ஜெயராம்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: வரைமுறை என ஒன்று உண்டு.. வாய் பொத்திக் கேளுங்கள்
: புடவையும் மெல்ல விலகுது.. ஏனென்று பாருங்கள்
பெ: பார்வையைச் சுருக்கிக் கொண்டு
: லலலா
பெ: பாடங்கள் எழுதிவிடு.. லலலா..
: படிக்கிற வயசில்லையே
பெ: லலலா..
ஆ: படுக்கையை விரித்துவிடு
பெ: என் பாடம் நான் சொல்ல
: பெண் பாடம் நான் சொல்ல.. வா மெல்ல.. மெல்ல.. மெல்ல

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: இது ஒரு புது அனுபவம்.. ஏழையின் சந்தோஷம்
பெ: நுனி முதல் அடி வரையிலும் பாய்ந்தது மின்சாரம்
: உதட்டினில் இனிக்கிறதே
பெ: லலலா..
: கொடுத்தது பழரசமா.. ஆஆஆ..
பெ: கொடுத்ததைத் திருப்பிக் கொடு
: ஆஆஆ..
பெ: அது என்ன இலவசமா
: ஆஹாஹா.. ஆரம்பம்
பெ: பூவுக்குள் பூகம்பம்
: தேன் சிந்தும்.. சிந்தும்.. சிந்தும்

பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
: A B C.. நீ வாசி.. So easy.. உன் ராசி.. வா ரோஸி
பெ: அழகிய பள்ளியறையிது
: பள்ளியறை பள்ளியறையா
பெ: பள்ளி வந்து சொல்லித்தர வந்தேன்
: சொல்லித் தந்து வரும் கலையா
பெ: A B C.. நீ வாசி.. எல்லாம் என் கைராசி.. So easy..
...

# 107 குங்குமம் மஞ்சளுக்கு - எங்க முதலாளி

படம்: எங்க முதலாளி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி

 பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
...

: பூமேனி ஜாடை சொல்லும் கோலமென்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலமென்ன
பெ: ஆசைக்கு நாணம் இல்லை.. தேடி வந்தேன்
பூஜைக்குப் பாலும் பழம் கொண்டு வந்தேன்
: மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்
பெ: நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படிப்பேன்
: ராத்திரி நேரம் வந்தால் சுகமே.. சுகமே
பெ: பூத்தது மொட்டு ஒன்று.. சுகமே.. சுகமே
: எந்நாளும் இன்பம் ஒரு கோடி

பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...

பெ: மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடித் தேடி நூலானேன்
: நூலை நான் மாலையாக்கிச் சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறட்டுமா
பெ: கூரான பார்வை என்னை வேலாகக் குத்துதய்யா
ஆ: வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதடி
பெ: பாய்கின்ற பாதையெங்கும் சுகமே.. சுகமே
: பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே.. சுகமே
பெ: எந்நாளும் இன்பம் ஒரு கோடி

: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கையிங்கு வந்த நாள் நல்ல நாள்
பெ: குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
...

# 95 ஒரே ராகம்.. ஒரே தாளம் - அமுத கானம்

படம்: அமுத கானம்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி


: ஆ.. ஆ.. ஆஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ ஆ ஆ..
ஆஆஆ ஆ ஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
...

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
...

பெ: சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
சாயங்கால மேகங்கள் மேனி மூட.. மோகங்கள்
மடி சாயும்போது சொந்தங்கள்.. தோளில்தானே சொர்க்கங்கள்
: இடைக்காவலின் தடை மீறவா.. இடைக்காவலின் தடை மீற வா
இன்னும் என்ன கன்னிப் போர்வை.. தேவையா

பெ: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
வரம் நீ.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
...

: கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணில் கோடி மின்னல்கள்.. கன்னம் ஏங்கும் சின்னங்கள்
கண்ணன் கையில் வண்ணங்கள்.. காணும் நெஞ்சக் கிண்ணங்கள்
பெ: இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்.. இதழ் வாசலில் இதழ் பூசுங்கள்
காலை மாலை வேளையின்று காணவா

: ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
ஒரே ராகம்.. ஒரே தாளம்.. ஒரே பாடல் பாடவா
பெ: வரம் நீயே.. தரும் நாள்.. மடியிலே தூங்கவா
&பெ: லலாலாலா.. லாலாலாலா.. லாலாலாலா.. லாலலா..
...

# 94 என் இனிய பொன் நிலாவே - மூடுபனி

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பொன் மாலை நேரங்களே.. என்னின்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென்காற்றின் இன்பங்களே.. தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்.. சிறு கண்ணீரிலாடும்
கைசேரும் காலம்.. அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
தா.. ததததா..
...

#78 வா வா அன்பே அன்பே - அக்னி நட்சத்திரம்

படம்: அக்னி நட்சத்திரம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்.. எல்லாமே என் சொந்தம்
இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே.. காதல் நெஞ்சே நெஞ்சே
...

: நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும்
காலம் தோறும் என்னைச் சேரும் கண்மணி
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரைக் கூறும் பொன்மணி
பெ: காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி
ஆணை போடலாம்.. அதில் நீயும் ஆடலாம்
: நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே
பெ: நீயின்றி ஏது பூ வைத்த மானே
: இதயம் முழுதும் எனது வசம்

பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...

பெ: கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானலல்ல காதல் என்னும் காவியம்
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம்
பாவையல்ல பார்வை பேசும் ஓவியம்
: காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும்
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது
பெ: உன் தோளில்தானே பூமாலை நானே
: சூடாமல் போனால் வாடாதோ மானே
பெ: இதயம் முழுதும் எனது வசம்

: வா வா அன்பே அன்பே
பெ: காதல் நெஞ்சே நெஞ்சே
: உன் வண்ணம் உன் எண்ணம்
பெ: எல்லாமே என் சொந்தம்
: இதயம் முழுதும் எனது வசம்
பெ: வா வா அன்பே அன்பே
: காதல் நெஞ்சே நெஞ்சே
...