Showing posts with label 1990's. Show all posts
Showing posts with label 1990's. Show all posts

326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: திருமதி பழனிச்சாமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

குத்தால மேகமெல்லாங் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியைக் கொடியிடைதான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

செஞ்சாந்துக் குழம்பெடுத்துத் தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்துக் கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாகப் பிறந்த பல்லாக்கு நீயோ?
ஈரேழு உலகில் ஈடாக யாரோ?
நெஞ்சோடு கூடு கட்டிக் கூவும் குயிலோ?

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நானவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்குத் தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

325 நிலவே நீ வரவேண்டும் - என்னருகில் நீ இருந்தால்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: என்னருகில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
எழுதியவர்: நா. காமராசன்
பாடியவர்: இளையராஜா



நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடி வா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

ஓ.. ஓஓஓ..
இதய தாகம் கூடுதே.. அமுத யமுனை நீயே
பருவ ராகம் பாடுதே.. வசந்த சுகமும் நீயே
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..

நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

ஓ.. ஓஓஓ..
பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்
இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்
மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே
காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே
கலைந்து பிரிந்த மேகங்கள்
இழந்த காதல் சோகங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..

நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...

: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் 
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும் 
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் 
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...

பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
: காதல் தந்த நினைவுகளைக்
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகளுண்டு
அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை 
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...



323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...
ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன், என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன், முடியவில்லை
இமய மலையென்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

#319 ஆலோலம் பாடி அசைந்தாடும் - ஆவாரம்பூ

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
பாடியவர்: இளையராஜா
படம்: ஆவாரம்பூ
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

ஆ.. ஆஆஆ..  மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்ப துன்பம் என்றும் உண்டு
தாயிழந்த துன்பம் போலே
துன்பமது ஒன்றும் இல்லை
பூமியென்ற தாயும் உண்டு
வானமென்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

சோகமெதும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவைத் தந்தால் கூட
அதையுமிங்கு அறிந்தாயில்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊரெங்கள் பிள்ளையென்று
இன்று சொல்லக்கூடும்
உலகமுந்தன் சொந்தமென்று
உந்தனுள்ளம் பாடும்
நீ யாரோ, அன்பே அமுதே?

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: சின்னத் தாயி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

நேத்து வெதச்சு வச்ச நேசந்தான்
பூத்துக் கனிஞ்சு வரும் நேரந்தான்
வாராமப் போகாது.. வாடாதே பூந்தேனே
சேராம வாழாது.. தண்ணீரச் செம்மீனே
நம்மூரு கோட்டச்சாமி ஒன்ன என்ன(னை) சேத்தாச்சு
என் ஜோடி நீதானென்று என்றோ எழுதி வச்சாச்சு
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ(ழை) கத்தாழ(ழை) ஆகாது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்ன(னை)ப் பொருத்தவரை காவியம்
எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி
பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர(ரை) மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்
என்னாச(சை) காத்தோடு போகாது
எந்நாளும் என் வாக்குப் பொய்க்காது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

#316 என் காதலே.. என் காதலே - டூயட்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
...
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா? இல்லை போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா? உனை அமுத விஷமென்பதா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா? தடுமாற்றமா? என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா, இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு..
...

#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே

அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது

அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா

பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

பெ: வந்தாள் புல்லாங்குழல் வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

#307 பார்த்துப் பார்த்துக் கண்கள் - நீ வருவாய் என

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: நீ வருவாய் என
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுதியவர்: பா.விஜய்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...

: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...
பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்.. நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திடக் கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்.. அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்.. எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து.. தினம் வழி பார்த்து.. இரு விழிகள் தேய்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
நீ வருவாய் என.. நீ வருவாய் என
...

#306 நில்லாத வெண்ணிலா - ஆணழகன்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ஆணழகன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & ஸ்வர்ணலதா

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

: மான் துள்ளும் மலையாளத்தின் விழிச் சித்திரமே.. சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட நன்னிலமே.. நன்னிலமே
பெ: கேரளக் குயில் கூவிடும் இசை தித்தித்ததோ.. தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில் உன்னைச் சந்தித்ததோ.. சந்தித்ததோ
: பொன்னல்லவோ.. சிறு பூவல்லவோ
மெல்லத் தொடவோ.. என்னைத் தரவோ
பெ: தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ.. நான் தரவோ
: செம்மீன்கள் துள்ளுதே.. இங்கும் அங்கும்.. கண்ணோடையில்
பெ: சந்தோஷம் பொங்குதே .. முன்னும் பின்னும்.. உன் கூடலில்
நான் சொல்லவோ.. சின்னப் பெண் அல்லவோ..

: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
பெ: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் காதலி
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் கண் வழி
...

பெ: நீ வர எதிர்பார்த்தது இந்த நந்தவனம்.. நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது இந்த செங்கமலம்.. செங்கமலம்
: காமனின் கலை காண்பது இந்த அந்தப்புரம்.. அந்தப்புரம்
பூமரக் குயில் கூவுது இங்கு சப்தஸ்வரம்.. சப்தஸ்வரம்
பெ: மஞ்சமே இந்த நெஞ்சமே
சுகம் பஞ்சமோ.. இல்லை கொஞ்சுமோ
: உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ.. அள்ளிச் செல்லவோ
பெ: அன்றாடம் சேர்வது.. மன்னா.. மன்னா உன் பொன்மடி
: எந்நாளும் இன்பமே.. நீயே.. நீயே என் பைங்கிளி
ஓ.. மங்கையே.. பொங்கிடும் கங்கையே

பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
: நில்லாமலே நீ போவதேன்.. சொல்லாமலே நான் நோவதேன்.. ஏன்
பெ: நில்லாத வெண்ணிலா.. நில்லு.. நில்லு.. என் வாசலில்
சொல்லாத பொன்மொழி சொல்லு.. சொல்லு.. உன் பார்வையில்
...

#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: கேப்டன் மகள்
இசை: ஹம்சலேகா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

கூந்தல் முடிகள் நெற்றிப் பரப்பில்
கோலம் போடுதே அதுவா.. கோலம் போடுதே அதுவா
சிரிக்கும்போது கண்ணில் மின்னல்
தெரித்து ஓடுதே அதுவா.. தெரித்து ஓடுதே அதுவா
மூக்கின் மேலே மூக்குத்தி போலே மச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
கழுத்தின் கீழே கவிதைகள் ரெண்டு மிச்சம் உள்ளதே
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
...

முல்லை நிறத்துப் பற்களில் ஒன்று
தள்ளி உள்ளதே அதுவா.. தள்ளி உள்ளதே அதுவா
சங்கு கழுத்தைப் பாசி மணிகள்
தடவுகின்றதே அதுவா.. தடவுகின்றதே அதுவா
ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் புன்னகை செய்வாய்
அதுவா.. அதுவா.. அதுவா
ஓரிரு வார்த்தை தப்பாய்ப் போனால் உதடு கடிப்பாய்
அதுவா.. அதுவா.. அதுவா
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ihikhik 
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல் விட மாட்டேன்
அதுவரை உன்னைத் தொட மாட்டேன்
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ.. அது ஏதோ.. அடி.. ஏதோ உன்னிடம் ihikhik  இருக்கிறது
...

#292 ஆஹா.. கனவேதானா - அமராவதி

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!! doasembahros
படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

கட்டுக் கூந்தல் பார்த்தேன்.. தரையில் வந்த மேகமா
பட்டுத் தோள்கள் பார்த்தேன்.. பாரிஜாத தேகமா
முதுகு வண்ணம் பார்த்தேன்.. முல்லைப் பூவின் பாகமா
மொட்டு வண்ணம் பார்த்தேன்.. கட்டுக் காவல் மீறுமா
கழுத்து வரைக்கும் பார்த்தேன்.. சில கணக்கு வழக்கும் பார்த்தேன்
பளிங்கு நிறங்கள் பார்த்தேன்.. அடி.. பறந்து பறந்து பார்த்தேன்
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே
தேக வண்ணம் காட்டித் தீ வளர்த்த முல்லையே
பூமுகத்தைக் காட்டு.. பொறுமையின்னும் இல்லையே
முழுக்க நனைந்த பின்னே உன் முகத்தை மறைப்பதென்ன
குளித்து முடித்த பெண்ணே.. உன் கூந்தல் தடுப்பதென்ன
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்

ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
காதல் தேவதை மண்ணில் வந்ததோ
கண்கள் ரெண்டும் போதை கொண்டதோ
ஓஹோ.. முன்னால் பாரடி.. உன் முகத்தைப் பார்க்கிறேன்
நீ பின்னால் போவதேன்.. நான் பெண்ணா கேட்கிறேன்
ஆஹா.. கனவேதானா.. ஓஹோ.. நிஜமேதானா
...

#291 தாஜ்மஹால் தேவையில்லை - அமராவதி

படம்: அமராவதி
இசை: பாலபாரதி
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

: பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதலோ பூலோகம் தாண்டி வாழலாம்
பெ: ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
: கண்ணீரில் ஈரமாகிக் கறையாச்சு காதலே
பெ: கறை மாற்றி நாமும் மெல்லக் கரையேற வேண்டுமே
: நாளை வரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

பெ: சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
: வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவமென்பதா
பெ: வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
: வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
பெ: வாணும் மண்ணும் பாடல் சொல்லும் நம் பேரிலே

: தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
பெ: காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
: இந்த பந்தம் இன்று வந்ததோ
பெ: ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
: உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
பெ: தாஜ்மஹால் தேவையில்லை
: அன்னமே அன்னமே.. காடு மலை நதிகளெல்லாம்
பெ: காதலின் சின்னமே
...

#289 புன்னகையில் மின்சாரம் - பரதன்

படம்: பரதன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & எஸ்.ஜானகி



: புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: அஹா.. அஹா.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

: மந்திரத்தை நான் பாட.. அந்தரத்தில் நீயாட
சொர்க்கந்தான்.. மிகப் பக்கந்தான்
பெ: முத்தளந்து நான் போட.. முக்கனியை நீ தேட
மெள்ளத்தான் இடை துள்ளத்தான்
: வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த
செங்கமலம் தானாக என்னை நெருங்க
பெ: செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த
சங்கமங்கள் தேனாகத் தித்திக்க
: இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான்
பெ: இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான்
ஜிகுஜிகு ஜம்ஜம்..

: தரத்தத்த.. புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: ஹ.. கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
...

பெ: சொல்லியது மாளாது.. சொல்லிச் சொல்லித் தீராது
நித்தந்தான் ஒரு பித்தந்தான்
: பொற்கலசம் ஏராட.. பைங்கொடியும் போராட
அம்மம்மா.. துயர் என்னம்மா
பெ: வெண்ணிலவு போல் இந்தப் பெண்ணிலவு தேய
வெட்கங்களைப் பார்க்காமல் கட்டித் தழுவு
: ஹா.. பள்ளியறை ராஜாங்கம் என்னவென்றுதானே
நள்ளிரவில் நீயாகச் சொல்லித் தா
பெ: சொல்லித் தர நீ கேட்டுப் பாய் போட்டுத் தேன் பாட்டுக் கேட்கத்தான்
: சுகம் அள்ளித் தர வந்தாளே கண்ணே.. என் கண்ணம்மா.. ஜிகுஜிகு ஜம்ஜம்..

பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தரததத்தத்தத்த.. தத்தத்தத்த..
புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க
கண்ணன் துணை ராதே ராதே
கட்டிக் கொள்ளும் மாதே மாதே
நெஞ்செல்லாம்.. ஜிகுஜிகு ஜம்ஜம்..
பெ: கன்னமெனும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க
: தததுதுத்து தத்தத்துதுத்து..
தாதத்தத்தத் தகுததா.. தகுதத்தத்தத் தகுததத்தத்த..
தத்தத் தகுதத்தா.. தகதுகுதகு தத்தத்ததத்தது.. தகதுகுதகு.. தா..

#288 ஒரு நாள் ஒரு பொழுது - அந்தி மந்தாரை

படம்: அந்தி மந்தாரை
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: ஸ்வர்ணலதா


 

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம.. உசுரு அல்லாடுதே
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சி காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஓடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு
ஒடி வயசாச்சு.. உருமாறிப் போச்சு
நெனப்புக மட்டும்தானே மாறாம இருக்கு

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
என்னச் சுத்தி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும்
உன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
காத்து மழை எதனாலும் கரையாத பாசம்
கட்டையிலும் வேகாது கைத்தொட்ட வாசம்

ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
காவிரி நதியும் ரெண்டாகக் கூடும்.. கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும்
காலத்தின் கணக்கு யார் காணக் கூடும்
ஒரு நா(ள்) ஒரு பொழுது உம் மூஞ்சிக் காங்காம உசுரு அல்லாடுதே
மறு நா(ள்) வரும் வரைக்கும் பசி தூக்கம் கொள்ளாம மனசு மல்லாடுதே
...

#287 செம்பூவே பூவே உன் மேகம் நான் - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: இமைகளும் உதடுகளாகுமோ..
பெ: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

: அந்திச் சூரியனும் குன்றில் சாய.. மேகம் வந்து கச்சையாகக்
காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்
பெ: தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சிலாடும் ஸ்வாசச் சூட்டில் காதல் குற்றாலம்
: தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான்
சேலை நதி ஓரமாய் நீந்தி விளையாடவா
பெ: நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி
: ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி
பெ: கட்டிலும் கால் வலி கொள்ளாதோ.. கைவளை கைவளை கீறியதோ

: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

பெ: இந்தத் தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ
: அந்தக் காமனம்பு என்னைச் சுட்டு.. பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்.. சேலைப் பொன் பூவே
பெ: விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ
: முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே
பெ: நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே
: பாயாகும் மடி.. சொல்லாதே பஞ்சணைப் புதையல் ரகசியமே

பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
: செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ.. ஹோஓஓஓ..
: படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ.. ஹோஓஓஓ..
பெ: இமைகளும் உதடுகளாகுமோ..
: வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே.. பூவே.. உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெ: சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும்.. முத்துண்டே
...

#286 ஆலோலம்கிளி தோப்பிலே - சிறைச்சாலை

படம்: சிறைச்சாலை
இசை: இளையராஜா
எழுதியவர்: அறிவுமதி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா



பெ.குழு: ஹே.. ஹேலலா லாலா லாலலா..
லாலாலா லாலாலா.. லாலாலா லாலாலா..
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

: கடல்கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ.. ஹோய்..
பெ: துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவான மழைதானோ.. ஓ..
: காதல் விழாக்காலம் கைகளில் வா வா.. ஈர நிலாப் பெண்ணே
பெ: தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல்.. ஆடி வா
: வீணை புது வீணை.. சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்கமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...

பெ: கனவுக் கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ.. ஓ..
: கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ.. ஹோய்..
பெ: பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
: நிலாவின் பிள்ளையிங்கு நீதானோ
பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ
பெ: ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வா வா.. புதுக் காதல் குறுந்தொகையா

: ஆற்றில் குளித்த தென்றலே.. சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி.. கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி
பெ: நெஞ்சிலொரு தும்பி பறக்கும்.. ஹையோ ஹையயோ
: செல்லக்கிளி சிந்து படிக்கும்.. ஹையோ ஹையயோ
பெ: ஆலோலம்கிளி தோப்பிலே தங்கிடும் கிளி தங்குமே
இல்லாக்கதை சொல்லாதடி ஓலவாயி.. விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
...