326 பாதக் கொலுசு பாட்டு - திருமதி பழனிச்சாமி

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: திருமதி பழனிச்சாமி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

குத்தால மேகமெல்லாங் கூந்தலிலே நீந்தி வரும்
கொய்யாத மாங்கனியைக் கொடியிடைதான் ஏந்தி வரும்
மத்தாப்பு வானமெல்லாம் வாய்ச் சிரிப்பு காட்டி வரும்
மானோடு மீனிரண்டை மைவிழியோ கூட்டி வரும்
பொன்னாக ஜொலிக்கும் பெண் பாவை அழகு
ஒன்னாகக் கலந்த முன்னூறு நிலவு
பொட்டோடு பூவும் கொண்டு தாவும் மயில்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

செஞ்சாந்துக் குழம்பெடுத்துத் தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்துக் கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும் தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூறலிலே கண் விழித்த செண்பகமே
பெண்ணாகப் பிறந்த பல்லாக்கு நீயோ?
ஈரேழு உலகில் ஈடாக யாரோ?
நெஞ்சோடு கூடு கட்டிக் கூவும் குயிலோ?

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
...

பெண்ணென்ற ஜாதியிலே ஆயிரத்தில் அவளொருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும் போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே நானவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன் மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்குத் தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத்தான்

பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச அம்மன் செலைதான்
பாதக் கொலுசு பாட்டுப் பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பாக்கக் கோடி பெறும் கோடி பெறும்
...

325 நிலவே நீ வரவேண்டும் - என்னருகில் நீ இருந்தால்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: என்னருகில் நீ இருந்தால்
இசை: இளையராஜா
எழுதியவர்: நா. காமராசன்
பாடியவர்: இளையராஜா



நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடி வா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

ஓ.. ஓஓஓ..
இதய தாகம் கூடுதே.. அமுத யமுனை நீயே
பருவ ராகம் பாடுதே.. வசந்த சுகமும் நீயே
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..

நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

ஓ.. ஓஓஓ..
பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்
இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்
மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே
காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே
கலைந்து பிரிந்த மேகங்கள்
இழந்த காதல் சோகங்கள்
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..

நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ.. ஓஓஓஓ..
நிலவே நீ வர வேண்டும்.. ஓஓஓஓ..
தனியே உன் துணை வேண்டும்.. ஓஓஓஓ..
...

324 மனமே மனமே தடுமாறும் - ரோஜாவனம்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: ரோஜாவனம்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


பெ: ஆ ஆ.. ஆ ஆஆ..
ஆ ஆ.. ஆ ஆஆ..
...
: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
...

: காதலென்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம்
போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் 
போகப் போகத் தூக்கத்தைக் கெடுக்கும் 
காதலென்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் 
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன்.. மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு?
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...

பெ: ஆ ஆ.. ஆ ஆஆ ஆ..
ஹா ஆ.. ஆ ஆஆ ஆ..
...
: காதல் தந்த நினைவுகளைக்
கழற்றி எறிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூட மூடிகளுண்டு
அலைகடல் மூடிட மூடிகளில்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா?
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா?
என் வாழ்விலே என்ன சோதனை
நான் வாழ்வதே என் வேதனை 
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு

: மனமே மனமே.. தடுமாறும் மனமே
உள்ளுக்குளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும்பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கிவிடு
என்னை நினைவின்றி தூங்கவிடு
...



323 உன்னைப் பார்த்த பின்பு நான் - காதல் மன்னன்

பாட்டுத் தலைவனை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: காதல் மன்னன்
இசை: பரத்வாஜ்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...
ஏன் பிறந்தேன் என்று நானிருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நானறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன், என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன், முடியவில்லை
இமய மலையென்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ? இல்லை மறைவாயோ?
யே யே யே யே யே..
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
...

#322 சிங்காரச் சீமையிலே - நினைவுச் சின்னம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
படம்: நினைவுச் சின்னம்
இசை: இளையராஜா
எழுதியவர்: இளையராஜா
பாடியவர்: இளையராஜா

ஓ.. ஓஓ.. ஓஓஓ.. ஓ ஓஓ.. ஓஹோ..
ஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ ஓ.. ஓஓஓ ஓ.. 
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. இன்னும் உறக்கமென்ன?
பாலே பசுங்கொடியே.. இங்கே வருத்தமென்ன?
...

தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
தாயன்பு காணாது தனியாக வாட
நீ வந்து சேர்ந்து எனக்கிணையாகப் பாட
யாரடி உன்னைப் படைத்தார்? அன்னையும் தந்தையும் இல்லை
கூறடி.. என்னைக் கெடுத்தார் தெய்வமா? நம்பவும் இல்லை
அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன?
உண்மைதான் சொல்லடி.. முல்லையே மயங்காதே

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
...

மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போலத் தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை.. கண்கள்தான் பட்டுவிடுமே
பாடடி பாசக் கவிதை.. நெஞ்சம்தான் கெட்டுவிடுமே
என்றைக்கோ எழுதி வைத்தார்.. இன்றைக்கே நடப்பதெல்லாம்
உண்மைதான் முல்லையே.. என்னையே நான் மறந்தேன்

சிங்காரச் சீமையிலே செல்வங்களைச் சேர்த்ததென்ன?
செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன?
நோம்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க
தெய்வந்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
ஏலே இளங்கிளியே.. பாலே பசுங்கொடியே
...

#321 தீர்த்தக்கரை ஓரத்திலே - தீர்த்தக்கரையினிலே

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!🙏🌹
படம்: தீர்த்தக்கரையினிலே
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
ஓ.. ஓஓ ஓ.. ஓஓஓ.. ஓஓ ஓ..
ஆ.. ஆஆ.. ஆஆஆ..
...
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது.. தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
பாலைவனப் பாதையிலே பால் நிலவை நானும் கண்டேன்
தேனிறைத்த பால் நிலவு தீயிறைத்துப் போவதென்ன?
காதல் வரி பாடலெல்லாம் கானல் வரி ஆனதென்ன?
என் ஜீவன் நீ இன்றி எந்நாளும் வாழாது
என் கண்கள் உன் கோலம் காணாமல் தூங்காதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
ஒற்றை வழிப் பாதையிலே உன்னை மட்டும் நான் நினைத்தேன்
நெற்றி முதல் பாதம் வரை முத்தமிட்ட சொப்பனங்கள்
ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட அத்தனையும் கற்பனைகள்
நேராக உன் பார்வை என் மீது வாராது
நீயின்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா.. ஆ..
ஆஆஆஆ.. ஆஆஆ..

தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
பாடும் மொழி உனது தேடும் விழி எனது
தீர்த்தக்கரை ஓரத்திலே தென்பொதிகை சாரத்திலே
...

#320 மழையும் நீயே வெயிலும் நீயே - அழகன்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அழகன்
இசை: கீரவாணி
எழுதியவர்: புலமைப்பித்தன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா?
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா?
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே
அதுதானா காதல் கலை?
தோளோடு அள்ளிச் சேர்த்தானே
அதுதானா மோன நிலை?
இதுதான் சொர்க்கமா?
இது காம தேவனின் யாக சாலையா?

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலை போல் இதயம் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம்
அதன் எல்லை யாரறிவார்?
ஏதேதோ சுகம் போதாதோ?
இந்த ஏக்கம் யாரறிவார்?
முதலாய்.. முடிவாய்
இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

மழையும் நீயே.. வெயிலும் நீயே
நிலவும் நீயே.. நெருப்பும் நீயே
அடடா உனைத்தானிங்கு வாழும் மானிடர் காதல் என்பதா?
...

#319 ஆலோலம் பாடி அசைந்தாடும் - ஆவாரம்பூ

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros 
பாடியவர்: இளையராஜா
படம்: ஆவாரம்பூ
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

ஆ.. ஆஆஆ..  மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம்
இன்ப துன்பம் என்றும் உண்டு
தாயிழந்த துன்பம் போலே
துன்பமது ஒன்றும் இல்லை
பூமியென்ற தாயும் உண்டு
வானமென்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாயின்றி நின்ற பிள்ளை தன்னையென்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

சோகமெதும் சுமையே இல்லை
சுகங்கள் கூட சுகமே இல்லை
ஆதரவைத் தந்தால் கூட
அதையுமிங்கு அறிந்தாயில்லை
வந்ததுண்டு போனதுண்டு
உன் கணக்கில் ரெண்டும் ஒன்று
வரவும் உண்டு செலவும் உண்டு
உன் கணக்கில் வரவே உண்டு
ஊரெங்கள் பிள்ளையென்று
இன்று சொல்லக்கூடும்
உலகமுந்தன் சொந்தமென்று
உந்தனுள்ளம் பாடும்
நீ யாரோ, அன்பே அமுதே?

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
தனியானால் என்ன? துணையிங்கே
நான் பாடும் பாட்டுண்டு
அமுதே, என் கண்ணே.. பசும் பொன்னே
இனி துன்பம் ஏனிங்கு?
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டுத் தூங்கும் ஆவாரம் பூவே
...

#318 ஜோடி நதிகள் பாதை - அன்பே ஓடி வா

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: அன்பே ஓடி வா
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



ம்.. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ஹும்..
ஆ.. ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஹா..
லா.. லாலல்லாலா..
லா.. லாலலலலல லாலல்லாலா..
லலலலல.. லலலலல.. லலலலல.. லலலலல..
...
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

அன்பே என் நெஞ்சம் மேலும் தாளாது
மீண்டும் என் கண்ணில் கண்ணீர் கூடாது
ராகம் மாறலாம்.. நீதான் பல்லவி
காயம் நேரலாம்.. நீதான் பௌர்ணமி
இது காதலில்லை..
இது காதலில்லையென்பதா?
நினைவுகள் மறையுமா? கனவுகள் கரையுமா?
வானும் மண்ணும் இன்றோடு ஒன்றாக

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

ஆஹா.. என் வீணை மீண்டும் பாடாதோ
காதல் பூமாலை தோளைத் தேடாதோ
நீயோ பூவனம்.. உன் மௌனம் சம்மதம்
உன் நெஞ்சம் என் வசம்.. என் வாழ்வே உன் வசம்
இது நேசமில்லை..
இது நேசமில்லை.. பாசமே..
இருவரும் பழகினோம்.. இடையிலே விலகினோம்
காலம் மீண்டும் கையோடு கைசேர்க்க

ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
இரு கரை முழுதும் இனி மலர் வளரும்
ஆஹா.. ஜோடி நதிகள் பாதை விலகிச் சேர்ந்தன.. கதை பேசின
...

#317 நான் ஏரிக்கரை மேலிருந்து - சின்னத் தாயி

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: சின்னத் தாயி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: இளையராஜா

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகள சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

நேத்து வெதச்சு வச்ச நேசந்தான்
பூத்துக் கனிஞ்சு வரும் நேரந்தான்
வாராமப் போகாது.. வாடாதே பூந்தேனே
சேராம வாழாது.. தண்ணீரச் செம்மீனே
நம்மூரு கோட்டச்சாமி ஒன்ன என்ன(னை) சேத்தாச்சு
என் ஜோடி நீதானென்று என்றோ எழுதி வச்சாச்சு
எப்போதும் சொந்தங்கள் போகாது
செந்தாழ(ழை) கத்தாழ(ழை) ஆகாது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
என்ன(னை)ப் பொருத்தவரை காவியம்
எந்நாளும் நீதான்டி என்னோட ராசாத்தி
பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி
எங்கே நான் போனா என்ன எண்ணம் யாவும் இங்கேதான்
உன் பேர(ரை) மெட்டுக்கட்டி உள்ளம் பாடும் அங்கேதான்
என்னாச(சை) காத்தோடு போகாது
எந்நாளும் என் வாக்குப் பொய்க்காது

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டுத்
தென்காத்து ஓடி வந்துத் தூதாகப் போக வேணும் அக்கரையில
நான் உண்டான ஆசைகளச் சொல்லாமப் பூட்டி வச்சு
உள்ளார வாடுறேனே இக்கரையில..
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு தெசை பாத்திருந்து
ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல்ல..
மணி ஏழு எட்டு ஆன பின்னும்.. ஊரடங்கிப் போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னுத் தோணல்ல..
...

#316 என் காதலே.. என் காதலே - டூயட்

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: டூயட்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
...
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?
என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே நீ பூவெறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும்..
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்..
இனி மீள்வதா? இல்லை வீழ்வதா? உயிர் வாழ்வதா? இல்லை போவதா?
அமுதென்பதா? விஷமென்பதா? உனை அமுத விஷமென்பதா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
...

காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன்..
கண்களை நீ மூடிக்கொண்டாய், நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்..
இது மாற்றமா? தடுமாற்றமா? என் நெஞ்சிலே பனிமூட்டமா?
நீ தோழியா, இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா?

என் காதலே.. என் காதலே.. என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்?
சிலுவைகள்.. சிறகுகள்.. ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு..
...

#315 மயங்கினேன் மன்னன் இங்கு - சேலம் விஷ்ணு

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: சேலம் விஷ்ணு
இசை: சங்கீத ராஜன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

மூங்கில் இலை மேலே தூங்கும் துளி போலே
நாளும் ஏங்கினேன் பாவைக்காகவே
மணநாளும் வாராதோ.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

ஆசை கடலாக.. நானோ அனலாக
வாழும் நாளெல்லாம் நானும் வாடினேன்
திரை இன்னும் ஏனோ கண்ணே.. அன்பே வா வா

மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
தேனிசைப் பாடல் ஒன்று.. தினம் தினம் மோகம் கொண்டு
இசைத்தேன் உனக்காக..
மயங்கினேன் மன்னன் இங்கு.. கொஞ்சம் வா வா
தயக்கமேன் தாழம்பூவே.. நெஞ்சம் நீ தா
...

#314 மாமரத்துக் குயிலு - ராஜா ராஜாதான்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: ராஜா ராஜாதான்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & சித்ரா
பெ: மாமரத்துக் குயிலு
...
பெ: பூமஞ்சமிடும் மயிலு
...
பெ: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...
பெ: உன் மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பார்க்காமப் போகாதய்யா.. உன் வீராப்பு ஆகாதய்யா
...

: மை பூசும் கண்ணுக்குள்ளே
பொய் பூசும் சின்னப் புள்ள
மாராப்பு காத்தோடு ஆடும்
பெ: கல்யாணத் திட்டமிட்டு
கண்ணாலே வட்டமிட்டு
கண்ணா உன் தோள் சேரத் தேடும்
: முந்தானைப் பந்தல் இட்டு நான் தூங்கவா
பெ: முன்னூறு முத்தம் ஒன்னா நான் வாங்கவா
: அள்ளிக் கொள்ள நானாச்சு நீயாச்சு வா
பெ: அங்கமெங்கும் மோகத்தில் தீயாச்சு வா
: அம்மாடி சொல்லெல்லாம் தேனாச்சு வா

: மாமரத்துக் குயிலு.. மஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா
: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...

: மானுன்னா மானும் இல்லே.. மீனுன்னா மீனும் இல்லே
ராசாத்தி கண்ணென்ன கண்ணோ
பெ: நானுன்னா நானுமில்ல.. நீயின்னா நீயுமில்ல
நீயின்றி நானிங்கே உண்டோ
: நீ போகும் பாதை எல்லாம் என் பாதைதான்
பெ: நீ பார்க்கும் பார்வை எல்லாம் என் பார்வைதான்
: மெட்டிச் சத்தம் நான் கேட்கும் சங்கீதம்தான்
பெ: கட்டில் சத்தம் நான் தேடும் சந்தோஷந்தான்
 & பெ: சந்தோஷ சங்கீதம் நாம் பாடலாம்

: மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹே ஹேஹேஹேய்..
நேத்துக் கொடுத்த முத்தம்.. நெஞ்சில் இனிக்கும் நித்தம்
பெ: ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு.. இன்னும் குடுய்யா

: ஹே மாமரத்துக் குயிலு.. பூமஞ்சமிடும் மயிலு
பெ: பார்க்காமப் போகாதய்யா
: ஹேஹேஹேய்..
பெ: உன் வீராப்பு ஆகாதய்யா
: ஹேஹேஹேய்..
...

#313 அன்பே ஆருயிரே - செவ்வந்தி

பாட்டுத் தலைவனை அவர் நினைவு நாளில் வணங்குகிறேன்!doasembahros
படம்: செவ்வந்தி
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்



அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
...
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே வருவேன்
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்
நேசம் அழியாது பெண் மானே
உன்னை நினைத்தே நான் ஓடாய்த் தேய்ந்தே
உருவம் குலைந்தேதான் போனேனே
என் காதலின் சின்னமே.. ஏங்காதே என் அன்னமே
மண்ணில் நானிங்கே மறைந்தாலும்
மயிலே உன் எண்ணம் மறையாது
கண்ணே என் தேகம் சாய்ந்தாலும்
காற்றாய் உனைத் தேடி வருவேனே

அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

தீபம் இல்லாத கோயில் போலே
தினமும் தவித்தேனே நானிங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே
பொழுதே.. பூங்காற்றே நீ அங்கே
உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே
இனியும் சுமை தாங்க முடியாது
எந்தன் உயிர்க்கூடு தாங்காது
உன்னை நான் வந்து பார்க்காமல்
உருகும் என் மூச்சு போகாது

அன்பே ஆருயிரே..
உன்னைப் பார்ப்பதற்கே.. உயிரே.. உருகுது என் மனமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
ஜீவன் ஓயுமுன்னே நான் வருவேன் உன்னிடமே
அன்பே ஆருயிரே.. ஆசைப் பூங்கிளியே
...

#312 வள்ளி வள்ளி என வந்தான் - தெய்வ வாக்கு

படம்: தெய்வ வாக்கு
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: இளையராஜா & எஸ். ஜானகி

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

: சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
பெ: கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
: வண்ணப் பூ.. வஞ்சிப் பூ.. வாய் வெடித்த வாசப் பூ
அன்புத் தேன் இன்பத் தேன் கொட்டுமா
பெ: இந்தப் பூ சின்னப் பூ.. கன்னிப் போகும் கன்னிப் பூ
வண்டுதான வந்துதான் கட்டுமா
: என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போலத் தேகம் தன்னில் நாணம் என்னம்மா

பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

பெ: வந்தாள் புல்லாங்குழல் வாங்கி அதை ஏந்தும் மன்னன் விரல்
: மன்னன் சொல்லும் கவி மங்கைக்கது காதல் நீலாம்பரி
பெ: அம்மம்மா.. அப்பப்பா.. இன்பம் தரும் கானங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
: மங்கை நீ.. கங்கை நீ.. வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
பெ: எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேறு இங்கு யாரும் இல்லையே

: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
பெ: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்.. ஹோஓ..
புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
சொல்லித் தரச் சொல்லிக் கேட்டு தினமும்
சொல்லித் தந்த சிந்து பாடினான்
வல்லி இன்பவல்லியென்று தினமும்
முல்லைச் சரம் கொண்டு சூடினான்
: வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன்தான்
பெ: புள்ளி வைத்துப் புள்ளி போட்டான் புதுக் கோலம்தான்
...

#311 இது குழந்தை பாடும் தாலாட்டு - ஒருதலை ராகம்

பாட்டுத் தலைவனைஅவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!doasembahros

படம்: ஒருதலை ராகம்

இசை: டி. ராஜேந்தர்

எழுதியவர்: டி. ராஜேந்தர்

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

...

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...


நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்

வடமிழந்த தேரதுவொன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

சிறகிழந்த பறவையொன்றை வானத்தில் பார்க்கிறேன்

உறவுறாத பெண்ணை எண்ணி நாளெல்லாம் வாழ்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்

வெறும் காற்றில் உளி கொண்டு சிலையொன்றை வடிக்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விடிந்துவிட்ட பொழுதில்கூட விண்மீனைப் பார்க்கிறேன்

விருப்பமில்லாப் பெண்ணை எண்ணி உலகை நான் வெறுக்கிறேன்


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

...


உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது

உறவுறுவாள் எனதானோ மனதை நான் கொடுத்தது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது

ஒருதலையாய்க் காதலிலே எத்தனை நாள் வாழ்வது


இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதியில்லாத ஓடம்

இது நதியில்லாத ஓடம்

...

#310 காதல் என்பது பொதுவொடைமை - பாலைவன ரோஜாக்கள்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros

படம்: பாலைவன ரோஜாக்கள்

இசை: இளையராஜா

எழுதியவர்: கங்கை அமரன்

பாடியவர்: இளையராஜா


ஆஆ ஆஆஆஆ.. ஆஆ ஆ ஆஆஆஆ..

...

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

...


ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு

அந்த வழி போகாத ஆளிங்கு யாரு

புத்தனும் போன பாதைதான்

பொம்பளை என்னும் போதைதான்

அந்த வேகம் வந்திடும்போது

ஒரு வேலி என்பது ஏது

இது நாளும் நாளும் தாகந்தான்

உண்மைய எண்ணிப் பாரடா

இது இல்லாட்டா உலகம் இங்க ஏதடா


காதல் என்பது பொதுவொடைமை

கஷ்டம் மட்டுந்தானே தனி உடைமை

அப்பனும் ஆத்தாளும் சேராமப் போனா

நீயுந்தான் பொறக்க முடியுமா

இதை எப்போதும் நீயுந்தான் மறுக்க முடியுமா

...


#309 மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: மே மாதம்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்


மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
ஓ.. மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நாம் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்து போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே.. என் வானம் உன்னைத் தேடுதே
...

#308 ஆறும் அது ஆழமில்ல - முதல் வசந்தம்

என் இசைக் கடவுளை அவர் பிறந்தநாளில் வணங்குகிறேன்!! doasembahros
படம்: முதல் வசந்தம்
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்: இளையராஜா

பெ.குழு: ம்ம் ம்ம்ம்.. ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்.. ம்ம் ம்.. ம்ம்ம்ம் ம்.. ம்..
...
: ஆறும் அது ஆழமில்ல
அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

: மாடி வீட்டுக் கன்னிப் பொண்ணு
மனசுக்குள்ள ரெண்டு கண்ணு
ஏழைக் கண்ணை ஏங்க விட்டு
இன்னும் ஒன்னைத் தேடுதம்மா
கண்ணுக்குள்ள மின்னும் மையே
உள்ளுக்குள்ள எல்லாம் பொய்யே
சொன்ன சொல்லு என்ன ஆச்சு
சொந்தமெல்லாம் எங்கே போச்சு
நேசம் அந்தப் பாசம்
அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டுச் செஞ்ச மோசமே

: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...

பெ.குழு: ம்ம் ம்ம் ம்ம்ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்.. ம்ம் ம்ம் ம்..
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்..
...

: தண்ணியில கோலம் போடு
ஆடிக்காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்டை கட்டு
அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனக் கூட்டி வந்து
அவன அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்கும் ஐயா
ஆசை வச்சாக் கிடைக்கும் ஐயா
ஆனா கிடைக்காது நீ ஆசை வைக்கும் மாது
அவள் நெஞ்சம் யாவும் வஞ்சமே

: ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
அடி அம்மாடி.. அதனாழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி.. அதப் பார்த்த பேரைக் கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல
அது சேருங்கடலும் ஆழமில்ல
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
ஆழம் எது ஐயா.. அந்தப் பொம்பளை மனசுதாய்யா
...


#307 பார்த்துப் பார்த்துக் கண்கள் - நீ வருவாய் என

பாட்டுத் தலைவனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!doasembahros
படம்: நீ வருவாய் என
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
எழுதியவர்: பா.விஜய்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...

: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
...
பெ.குழு: ஆஆஆஆ.. ஆஆ ஆஆஆ..
: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும்.. நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திடக் கவிதைக்கும் கால்கள் இல்லை
உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம்.. அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்.. எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து.. தினம் வழி பார்த்து.. இரு விழிகள் தேய்கிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என

: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன்.. நீ வருவாய் என
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன்.. நீ வருவாய் என
தென்றலாக நீ வருவாயா.. ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா.. மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா.. பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா.. கவிதையாகிறேன்
பெ.குழு: நீ வருவாய் என.. நீ வருவாய் என
நீ வருவாய் என.. நீ வருவாய் என
...