# 38ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே - பூ

படம்: பூ
இசை: எஸ்.எஸ்.குமரன்
பாடியவர்: சின்மயி

ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...

காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையைத் தொடருதடா
குழந்தைக்கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும்
சருகுகள் சத்தம் போடும்.. தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அது வார்த்தை அல்ல மௌனம் ஆகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே உனக்காகப் பூத்திருக்கு
...
ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா
மாலையாகித் தவிழ்ந்திடவே உனது மார்பைக் கேட்குதடா
பனியில் அது கிடக்கும்.. நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீதான்.. அதன் வாசங்கள் எல்லாம் நீதான்
நீ விட்டுச் சென்றால் பட்டுப் போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா
ஆவாரம்பூ அந்நாளில் இருந்தே யாருக்குக் காத்திருக்கு
அந்திப் பகல் மழை வெயில் சுமந்தே
...

0 மறுமொழிகள்:

Post a Comment