# 109 இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி

படம்: உன்னால் முடியும் தம்பி
இசை: இளையராஜா

பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா


: இதழில் கதை எழுதும் நேரமிது
...
: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
மனதில் சுகம் மலரும் மாலையிது
: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது.. தனிமையில் நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
...

: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக் கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
பெ: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
: இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏனின்னும் தாமதம்.. மன்மத காவியம் என்னுடன் எழுது
பெ: நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
: ஏங்கித் தவிக்கையில் நாணம் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
பெ: காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
: காலம் என்றைக்கு கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
பெ: மாலை.. மணமாலையிடும் வேளைதனில்
தேகமிது விருந்துகள் படைத்திடும்

: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
...

: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பெ: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் - அந்த
மேகம்தனில் ஏது.. நீ சொல்வாய் கண்ணா
: அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்தப் பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
பெ: நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
: மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
பெ: காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணையென வருகிறது
: மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகமெனும் நெருப்பினைப் பொழிகிறது
பெ: மோகம் நெருப்பானால் - அதைத் தீர்க்கும்
ஒரு ஜீவநதி அருகினில் இருக்குது

பெ: மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
: இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது..
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ..
இதழில் கதை எழுதும் நேரமிது
...

0 மறுமொழிகள்:

Post a Comment