# 115 எங்கெங்கு நீ சென்ற போதும் - நினைக்கத் தெரிந்த மனமே

படம்: நினைக்கத் தெரிந்த மனமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & சித்ரா

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

: கண்களின் பார்வை அம்புகள் போலே நெஞ்சினிலே பாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும்போது காயங்களும் ஆறியதேன்
பெ: ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம் பிரிந்தது ஏனோ உன்னுறவே
நெருங்கிடும்போதும் நீங்கிடும்போதும் மயங்குவதேனோ என் மனதே
: இரு நெஞ்சின் துன்பம்.. இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
...

பெ: மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்.. மாங்குயிலே.. மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்.. கண்மணியே.. கண்மணியே
: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்.. சந்திரன் அங்கே நின்றிடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலைபெறட்டும்.. கடலினில் கூட அலை நிற்கட்டும்
பெ: உன்னோடு சேரும் ஒரு நேரமே என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..

பெ: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்.. காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பெ: பூங்காற்று தாலாட்டும்.. அன்பே.. அன்பே..
: எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னைத் தேடும்
&பெ: லாலால லாலால லாலா.. லாலால லாலால லாலா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment