படம்: இந்திரன் சந்திரன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & சித்ரா
ஆ: தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
தும்தும்தும்ச தும்தும்தும் சகுச..
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
ஆ: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
ஆ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...
ஆ: தினமும் தினமும் தவிப்பதோ.. சிறிது உறங்க மடி கொடு
தழுவத் தழுவத் தடுப்பதோ.. அழகு முழுதும் அளந்திடு
பெ: மருவி மருவி அணைப்பதோ.. வயதும் மனதும் துடிப்பதேன்
இதுவும் அதுவும் கொடுப்பதோ.. சபலம் உனக்குப் பிறப்பதேன்
ஆ: தென்றலும் தீண்டினாலே புஷ்பமே நோகுமா
பெ: காதல் ஓர் போதையாகும்.. கன்னிப் பூவும் தாங்குமா
ஆ: அள்ளினால்.. கிள்ளினால்.. என்னடி.. ஏந்தினால் வாடுமோ மடல்
பெ: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
ஆ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
பெ: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
ஆ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...
பெ: அமுத மழையைப் பொழியவே சிவந்த உதடு அழைக்குதே
வரவும் தொடவும் பருவமே.. விருந்து வழங்கும் அணைப்பிலே
ஆ: மனமும் உடம்பும் கனியுமோ.. இரவு முழுதும் விரல் தொட
மதுர மதுர சுவைகளோ பருகும்பொழுது இனித்திட
பெ: தேனிலே ஊறுமிந்தப் பூமடல் போதுமா
ஆ: தென்னையின் கள்ளும் இந்தப் பூவுதட்டில் ஊறுமா
பெ: மெல்ல நீ கொண்டு போ.. மன்னவா.. பெண்மகள் மேனி ஓர் மலர்
ஆ: ஓஓஓஓஓஓ.. காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
பெ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
ஆ: ஓயாமல் என் நெஞ்சில் உன்னன்பே
பெ: ஆத்தாடி.. கண்பார்வை என் மீதா.. உனை நெருங்கிட
காதல் ராகமும் கனித் தமிழும் ஒன்று சேர்ந்ததுவோ
ஆ: ஆசைத் தாளமும் அழகியின் பூஜையில் பிறப்பதுவோ
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment