படம்: மௌன ராகம்
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
பெ.குழு: லாலா.. லா லாலா.. லா லா.. லாலாலா லா..
...
ஆ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது.. பூங்காற்றும் தூங்காது.. வா.. வா.. வா..
பெ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...
பெ: பூவிலே ஒரு பாய் போட்டு பனித்துளி தூங்க
ஆ: பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க
பெ: மாலை விளக்கேத்தும் நேரம்.. மனசில் ஒரு கோடி பாரம்
ஆ: தனித்து வாழ்ந்தென்ன லாபம்.. தேவையில்லாத தாபம்
பெ: தனிமையே போ.. இனிமையே வா
நீரும் வேரும் சேர வேண்டும்
ஆ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...
பெ&பெ.குழு: லால லாலா லா.. லா லா லலா..
பெ: ஹா ஹா ஹா ஹா.. ஹா ஹா ஹா ஹா
...
ஆ: காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது
பெ: காரணம் துணையில்லாமல் வாடிடும் வயது
ஆ: ஆசை கொல்லாமல் கொல்லும்.. அங்கம் தாளாமல் துள்ளும்
பெ: என்னைக் கேட்காமல் ஓடும்.. இதயம் உன்னோடு கூடும்
ஆ: விரகமே ஓர் நரகமோ சொல்
பூவும் முள்ளாய் மாறிப் போகும்
பெ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது.. பூங்காற்றும் தூங்காது.. வா.. வா.. வா..
ஆ: பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment