#232 வா வா என் வீணையே - சட்டம்

படம்: சட்டம்
இசை: கங்கை அமரன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்



: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா..
: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா
கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமா
: வா வா என் வீணையே
பெ: நநநா..
: விரலோடு கோபமா
பெ: நநநா.. நநந்நநநா..
...

பெ: தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
தண்டோடு தாமரையாட.. வண்டோடு மோகனம் பாட
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட
: துணை தேடுதோ.. தனிமைத் துயர் கூடுதோ
பெ: அணை மீறுதோ.. உணர்ச்சி அலை பாயுதோ
: நாள்தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட

பெ: வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா..
பெ: மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே
இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
...

: சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
சந்தோஷ மந்திரம் ஓத.. சந்தர்ப்பம் சாதகமாக
நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட
பெ: இரவாகலாம்.. இளமை அரங்கேறலாம்
: உறவாடலாம்.. இனிய சுரம் பாடலாம்
பெ: கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும்

: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா..
மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ
: கிள்ளாத முல்லையே.. காற்றோடு கோபமா
பெ: இளந்தென்றல் தேடும்போது ஊடலாகுமோ
: வா வா என் வீணையே
பெ: லலலா..
: விரலோடு கோபமா
பெ: லலலா.. வா வா உன் வீணை நான்
: நநநா..
பெ: விரல் மீட்டும் வேளைதான்
: நநநா.. நநந்நநநா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment