படம்: சூரசம்ஹாரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: அருண்மொழி & சித்ரா
பெ: லால லாலலா.. லால லால லாலா.. லாலலா.. லாலலா லா..
...
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவி
தேவலோகம் வேறு ஏது.. தேவியிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
...
ஆ: பாவை உந்தன் கூந்தல் இன்று போதை வந்து ஏற்றும்போது
பார்த்துப் பார்த்து ஏங்கும் நெஞ்சில் வந்திடாத மாற்றம் ஏது
பெ: பார்வை செய்த சோதனை.. நாளும் இன்ப வேதனை
ஆ: காதல் கொண்ட காமனைக் கண்டுகொண்டு நீயணை
பெ: கூடினேன்.. பண் பாடினேன்.. என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன்.. தள்ளாடினேன்.. உன் தாகம் தீர்க்கலானேன்
ஆ: பாலும் தெளிதேனும் பரிமாற நேரம் வந்ததே
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது.. தேவனிங்கு உள்ளபோது.. வேதம் ஓது
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
பெ: ஆசை கொண்ட காதல் கண்கள் பாட வந்த பாடல் என்ன
ஆடுகின்றபோது நெஞ்சில் கூடுகின்ற கூடல் என்ன
ஆ: நானும் உந்தன் தோளிலே வாழுகின்ற நாளிது
பெ: தோளில் இன்ப நாளிலே ஆடுகின்ற பூவிது
ஆ: அன்னமே என் ஆசையோ உன் ஆதி அந்தம் காண
கண்ணிலே உண்டானதே என் காதல் தேவி நாண
பெ: போதும்.. இது போதும்.. இளம் பூவை மேனி தாங்குமா
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
பெ: இனி நானென்பது நீயல்லவோ தேவ தேவா
ஆ: தேவலோகம் வேறு ஏது
பெ: தேவனிங்கு உள்ளபோது
ஆ: வேதம் ஓது..
பெ: நானென்பது நீயல்லவோ தேவ தேவா.. ஆ..
ஆ: நானென்பது நீயல்லவோ தேவ தேவி
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment