#45 சோலை புஷ்பங்களே - இங்கேயும் ஒரு கங்கை

படம்: இங்கேயும் ஒரு கங்கை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & பி.சுசீலா

பெ: ஆ.. ஆ.. ஆஆஆ..
ஆஆ ஆ.. ஆஆஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ ஆஆஆ ஆ..

சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
கண்ணாளனைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

: ஓ.. ஓ.. ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓஓஓ ஓ.. ஓ..
பெ: கண்ணா.. ஜோடிக் குயில் மாலையிடுமா.. இல்லை ஓடிவிடுமா
: கண்ணே.. நானிருக்க சோகமென்னம்மா.. கங்கை வற்றிவிடுமா
பெ: உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னையெண்ணி மூச்சிருக்குது.. உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
: கல்யாணமா.. கச்சேரியா.. தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது.. கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
: என் தேவியைக் கண்டாலென்ன.. என் வேதனை சொன்னாலென்ன
நல்வார்த்தைகள் தந்தாலென்ன
சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

பெ: உன்னை மீறி ஒரு மாலை வருமா.. சொந்தம் மாறிவிடுமா
உள்ளம் காத்திருந்து இற்றுவிடுமா.. தன்னை விற்றுவிடுமா
: பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே.. நீர் வடிய நான் பொறுக்கலே
பெ: பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி
: காவலுக்கு நாதியில்லையா.. எந்நாளும் காதலுக்கு நீதியில்லையா

பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
: என் தேவியைக் கண்டாலென்ன
பெ: என் வேதனை சொன்னாலென்ன
: நல்வார்த்தைகள் தந்தாலென்ன
பெ: சோலை புஷ்பங்களே.. என் சோகம் சொல்லுங்களே
...

0 மறுமொழிகள்:

Post a Comment