#154 விடிய விடிய நடனம் - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

காலங்கள் உதயமாகட்டும்.. கவலைகள் விலகி ஓடட்டும்
காட்டாறு நாமல்லவோ.. ஹேஹே..
வா மனிதா உலகை ஆளலாம்.. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்
ராஜாதி ராஜாக்கள் போல்..
ஏனென்று கேள்வி கேட்பவன் யாரும் இல்லை
எங்கேயும் கால்கள் போகலாம்.. ஏது எல்லை
கொண்டாட்டம் கும்மாளம்தானே.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
...

பாடுங்கள் புதிய கீர்த்தனம்.. எழுதுங்கள் புதிய சாசனம்
மாறட்டும் சமுதாயமே.. ஹோஹோ..
ஆடுங்கள் புதிய தாண்டவம்.. அழியட்டும் பழைய தத்துவம்
அச்சங்கள் நமக்கில்லை
ஓர் நாளும் ஓய்வதில்லையே நம் போராட்டம்
ஓர் நாளும் சாய்வதில்லையே நம் தேரோட்டம்
ஆரம்பம் ஆனந்த கீதம்.. தப்பாத தாளங்கள் நாம் போட
தக தகதிமி தகஜனு

விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
பிறந்து பிறந்து எதுவும் நாளாக வளர்ந்து வளர்ந்து மடியும்
மீண்டும்தான் புதிய புதிய ஜனனம்.. பயமென்னடா யமனிடம்
நம் கைகளில் நாளைய ராஜ்ஜியம்.. நம் கண்களில் நாளைய காவியம்
நாம் இட்டது இங்கொரு சட்டமாகக் கூடும்.. ரம்பம்பம்பம்..
விடிய விடிய நடனம்.. சந்தோஷம் விழியில் வழியும் தருணம்
ஒன்றான இளைய கரங்கள் எழுதும் மண் மேலே புது யுகம்
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தகிட தகதிமி.. தகதிமி தக..
தகிட தகிட தகதிமி.. தகதிமி தக.. தகிட தாம் தாம் தாம் தாம் தாம்..
...

0 மறுமொழிகள்:

Post a Comment