#155 காவியம் பாடவா தென்றலே - இதயத்தை திருடாதே

படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்: மனோ

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

விளைந்ததோர் வசந்தமே.. புதுச்சுடர் பொலிந்திட
மனத்திலோர் நிராசை ஏன்.. இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாளிலே சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்.. கேளுங்கள் என் கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ..
...

புலர்ந்ததோர் பொழுதிதுவோ.. புள்ளினத்தின் மகோத்சவம்
இவை மொழி இசை தரும் சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கந்தான் முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சியில்லையே

காவியம் பாடவா தென்றலே.. புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ.. புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில் மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே.. காவியம் பாடவா தென்றலே
...

0 மறுமொழிகள்:

Post a Comment