#220 மணி ஓசை கேட்டு எழுந்து - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

பெ: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து.. ஒரு கோயில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
ம்ம்ம்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்.. ஹா.. :-& :-&..
பேசக் கூடாதோ.. :-& :-&:-&..
பெ: கண்ணன் பாடும் பாடல் கேட்க.. ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன் பேசக் கூடாதோ
: ராதை மனம் ஏங்கலாமோ.. கண்ணன் மனம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ.. நெஞ்சம் தாங்குமோ

: மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

: பாதை மாறிப் போகும்போது.. :-& :-&..
ஊரும் வந்தே சேராது.. :-& :-&:-&..
தாளம் மாறிப் போடும்போது.. ஹா.. :-& :-&:-&..
ராகம் தோன்.. :-&:-&.. :-&:-&..
பெ: பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்தே சேராது
: தாளம் மாறிப் போடும்போது ராகம் தோன்றாது
பெ: பாடும் புது வீணையிங்கே
: ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ.. தாளம் சேருமோ

பெ: ஆஹாஹா.. மணி ஓசை கேட்டு எழுந்து
: நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
பெ: திருத்தேரில் நானும் அமர்ந்து
: ஒரு கோயில் சேர்ந்த பொழுது
பெ: அந்தக் கோயிலின் மணி வாசலை இங்கு மூடுதல் முறையோ
: ம்ஹும்ஹும்.. மணி ஓசை கேட்டு எழுந்து.. நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
...

0 மறுமொழிகள்:

Post a Comment