#225 சாலை ஓரம் சோலை ஒன்று வாடும் - பயணங்கள் முடிவதில்லை

படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா
எழுதியவர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி


பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

: பாவையிவள் பார்த்துவிட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள்தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
பெ: நீங்கள் என்னைப் பார்த்தால் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழையடிக்கும்
: ஹே.. பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்.. நேரம் பார்த்து வீசும்
பெ: மொட்டுக் கதவைப் பட்டு வண்டுகள் தட்டுகின்றதே.. இப்போது

பெ: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
...

பெ: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததனால் கன்னி மனம்தான் துடிக்க
: கடலுக்குக்கூட ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க யாருமில்லையோ
பெ: சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
: பேசும் கிள்ளையே.. ஈர முல்லையே.. நேரமில்லையே.. இப்போது

: சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்
பெ: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
&பெ: தாரரத்த ராரராத்த ராரா.. தராரா ராரா..
...

0 மறுமொழிகள்:

Post a Comment