#219 ஓராயிரம் பார்வையிலே - வல்லவனுக்கு வல்லவன்

படம்: வல்லவனுக்கு வல்லவன்
இசை: வேதா
எழுதியவர்: கண்ணதாசன்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்

நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒரு நாளும் போவதில்லை
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை
...
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்த மானிடர்க் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களிம் வாசமெல்லாம் ஒரு நாளைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

இந்தக் காற்றினில் நான் கலந்தேன்.. உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.. உந்தன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
...

0 மறுமொழிகள்:

Post a Comment