படம்: உதிரிப் பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.ஜானகி
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தனை அறியாதவள் தாயும் அல்ல
என் வீட்டில் என்றும் சந்த்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்
என் தெய்வம் மாங்கல்யம்தான்
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
நீ எங்கே.. இனி நான் அங்கே
என் சேயல்ல.. தாய் நீ
அழகிய கண்ணே.. உறவுகள் நீயே
...
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment