படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜென்சி
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
...
சாரல் தூவும் முகில்களும்.. சந்தம் பாடும் மலர்களும்
ஆனந்தப் புது வெள்ள நீரோட்டமும்
ஆகாய பூப்பந்தல் தேரோட்டமும்
ஆறோட.. கலைமானாக
பார்த்தன.. ரசித்தன ஓராயிரமே
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
...
பூவில் பொங்கும் நிறங்களே.. பூக்கள் ஆளும் மனங்களே
...
எங்கெங்கும் அவர் போல நான் காண்கிறேன்
அங்கங்கு எனைப் போல அவர் காண்கிறார்
நீயென்றும்.. இனி நானென்றும்
அழிக்கவும்.. பிரிக்கவும் முடியாதம்மா
இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே.. இங்கே.. பறந்தன
இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே.. அங்கே.. கனிந்தன
இது கண்கள் சொல்லும் ரகசியம்
நீ தெய்வம் தந்த அதிசயம்
லல லாலா லாலா லாலாலாலா
லல லாலா லாலா லாலாலாலா
...
# 87 இரு பறவைகள் மலை முழுவதும் - நிறம் மாறாத பூக்கள்
வழங்கியவர்:
நிலாக்காலம்
நேரம்:
4/08/2010 05:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கு பிடித்த பாடல்...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்...தொடர்ந்து அமுதம் பருக தருக...
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன். :)
ReplyDelete