# 93 ஓடுகிற தண்ணியில - அச்சமில்லை அச்சமில்லை

படம்: அச்சமில்லை அச்சமில்லை
இசை: வி.எஸ்.நரசிம்மன்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & பி.சுசீலா

பெ: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே.. தண்ணிய நான் தூது விட்டேன்
...
பெ: தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ..
...
பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
...
பெ: ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
...

: அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே.. என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்குக் குடை பிடிக்க வா மயிலே
பெ: குடையுமில்லை.. வடையுமில்லை..
கூதலுக்கு ஆதரவா.. தாவணியை நீ புழிய.. தலை துவட்ட நான் வரவா
: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனியும் தேன் வடியும்

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

பெ: மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக் குயிலே.. இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
: அருவி போல அழுகுறேனே.. அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டாலாகாதோ
பெ: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

பெ: ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில.. உரசி விட்டேன் சந்தனத்தை..
சேர்ந்துச்சோ.. சேரலையோ.. செவத்த மச்சான் நெத்தியிலே
...

0 மறுமொழிகள்:

Post a Comment