# 94 என் இனிய பொன் நிலாவே - மூடுபனி

படம்: மூடுபனி
இசை: இளையராஜா
எழுதியவர்: கங்கை அமரன்
பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பன்னீரைத் தூவும் மழை.. சில்லென்ற காற்றின் அலை
சேர்ந்தாடும் இந்நேரமே..
என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்களாடும் நிலை
என்னாசை உன்னோரமே..
வெண்ணீல வானில்.. அதில் என்னென்ன மேகம்
ஊர்கோலம் போகும்.. அதில் உள்ளாடும் தாகம்
புரியாதோ என் எண்ணமே.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
...

பொன் மாலை நேரங்களே.. என்னின்ப ராகங்களே
பூவான கோலங்களே..
தென்காற்றின் இன்பங்களே.. தேனாடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே
கண்ணோடு தோன்றும்.. சிறு கண்ணீரிலாடும்
கைசேரும் காலம்.. அதை என் நெஞ்சம் தேடும்
இதுதானே என் ஆசைகள்.. அன்பே..

என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம்.. ததத தாத்ததா..
தொடருதே தினம் தினம்.. ததத தாத்ததா..
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
தா.. ததததா..
...

1 comment:

  1. மனதை கொள்ளையடிக்கும் என் விருப்ப பாடல்...நன்றி தோழி...

    ReplyDelete