#128 சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி - தளபதி

படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
: ஆஆஆ.. வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
பெ: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை
: வானிலவை நீ கேளு.. கூறுமென் வேதனை
பெ: எனைத்தான் அன்பே மறந்தாயோ
: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

பெ: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
: ஆஆஆ ஆ.. மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
பெ: கோடி சுகம் வாராதோ நீயெனைத் தீண்டினால்
: காயங்களும் ஆறாதோ.. நீயெதிர் தோன்றினால்
பெ: உடனே வந்தால் உயிர் வாழும்
: வருவேன்.. அந்நாள் வரக் கூடும்

: சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
: நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே..
சுந்தரி.. கண்ணால் ஒரு சேதி சொல்லடி.. இந்நாள் நல்ல தேதி
பெ: என்னையே தந்தேன் உனக்காக.. ஜென்மமே கொண்டேன் அதற்காக
...

2 comments: