படம்: தளபதி
இசை: இளையராஜா
எழுதியவர்: வாலி
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
ஆ: ஆ.. ஆஆஆஆ ஆ ஆஆ ஆ.. ஆ.. ஆ.. ஆஆஆ..
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...
ஆ: பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் பழி விழுமோ என்றஞ்சும்
பெ: ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம்.. நினைவுகளில் உன் எண்ணம்
ஆ: கருணை கொண்டு நீதான் காயம்தன்னை ஆற்ற
பெ: பார்வை கொண்டு நீதான் பாச தீபம் ஏற்ற
ஆ: உயிரென நான் கலந்தேன்
பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...
பெ: வாழ்வெனும் கோலங்கள் இன்று வரைந்தது உன் பொன்னுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண்ணுள்ளம்
ஆ: கீழ்த்திசை பூபாளமென்று எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்
பெ: கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
ஆ: தோகை உன்னை நான் தான் தோளில் இன்று வாங்க
பெ: உனக்கென நான் பிறந்தேன்
ஆ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
பெ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
ஆ: வாய் பேசும் வார்த்தை எல்லாம் கண் பேசும் அல்லவோ
பெ: கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
ஆ: புத்தம் புது பூப்பூத்ததோ.. எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாளானதோ.. சொல்லடியென் செல்லக் கிளியே
...
0 மறுமொழிகள்:
Post a Comment