படம்: கிழக்குக் கரை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா
ஆ: I love you..
எனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
தளுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
ஊரையெல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவந்தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ..
பெ: ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
...
ஆ: மாஞ்சிட்டு மேடை போட்டு மைக் செட்டு மாட்டினா
மாமாவ வளைச்சிப் போட புதுத் திட்டம் தீட்டினா.. ஹா..
பெ: ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்னாடம் தூக்கம் கெட்டு அனல் மூச்சு வாங்கினா
ஆ: பச்சக் கிளியே.. தன்னந்தனியே.. இன்னும் என்னாச்சு
பெ: உச்சந்தலையில் வச்ச மலரில் வெப்பம் உண்டாச்சு
ஆ: மயங்காதே.. மாலை மாத்த மாமன் வந்தாச்சு
பெ: உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
...
பெ: நீ சூட்டும் பூவுக்காக நெடுங்கூந்தலாடுது
நீ வைக்கும் பொட்டுக்காக நடு நெத்தி வாடுது
ஆ: ஆத்தாடி ஒன்னத்தானே உயிர் நாடி தேடுது
காவேரி எங்கே போகும்.. கடல் வந்து கூடுது
பெ: அந்திப் பொழுதில் தென்னங்கிளையில் தென்றல் கூத்தாட
ஆ: மையை எழுதி.. மஞ்சக் குருவி கையை கோர்த்தாட
பெ: அடங்காத ஆசை கொண்டு நானும் போராட
பெ: உனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
ஆ: ஆ.. ஆஹஹஹா..
பெ: எனைவிட உனக்கிங்கு மனசுக்குப் புடிச்சவ எவதான்
ஆ: ஆ.. ஆஹஹஹா..
பெ: ஊரையெல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவந்தான்னு பாட்டு படிச்சா
யம்மாடியோ..
ஆ: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
எனக்கென பிறந்தவ.. றெக்கை கட்டிப் பறந்தவ இவதான்
தளுக்கில குலுக்குல இவளுக்கு இணை சொல்ல எவதான்
...
0 மறுமொழிகள்:
Post a Comment