#139 நீ பாதி நான் பாதி - கேளடி கண்மணி

படம்: கேளடி கண்மணி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
: நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

பெ: வானப் பறவை வாழ நினைத்தால் வாசல் திறக்கும் வேடந்தாங்கல்
: கானப் பறவை பாட நினைத்தால் கையில் விழுந்த பருவப் பாடல்
பெ: மஞ்சள் மணக்கும்.. என் நெத்தி வைத்த பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே
: மெல்லச் சிரிக்கும் உன் முத்து நகை ரத்தினத்தை அள்ளித் தெளிக்கும் முன்னேலே
பெ: மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

: நீ பாதி நான் பாதி கண்ணே
பெ: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

: இடது விழியில் தூசி விழுந்தால் வலது விழியும் கலங்கி விடுமே
பெ: இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்.. இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்
: ஸ்வர்க்கம் எதற்கு.. என் பொன்னுலகம் பெண்ணுருவில் பக்கம் இருக்கு.. கண்ணே வா
பெ: இந்த மனம்தான் என் மன்னவனும் வந்துலவும் நந்தவனம்தான்.. அன்பே வா..
: சுமையானது ஒரு சுகமானது.. சுவை நீதான்

பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயில்லையே.. இனி நானில்லையே.. உயிர் நீயே
பெ: நீ பாதி நான் பாதி கண்ணா
: அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
...

0 மறுமொழிகள்:

Post a Comment