படம்: அமரன்
இசை: ஆதித்யன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வசந்தமே.. அருகில் வா.. நெஞ்சமே.. உருக வா..
...
வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா
...
கனவை சுமந்த கயல்விழி.. உறவில் கலந்த உயிர் மொழி
இதயம் முழுதும் புது ஒளி.. இரவல் தந்த அவள் மொழி
சொந்தமுமாகி.. பந்தமுமாகி.. என் உயிர் வாழும் சொர்க்கமுமாகி
இமைக்க மறந்து இணைந்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா
...
மழலை சுமந்த மரகதம்.. மனதை சுமந்த தளிர் மரம்
நிழலைக் கொடுத்த வளைக்கரம்.. உயிரும் அவளின் அடைக்கலம்
புண்ணியம் கோடி செய்தவன் நானோ.. ஜென்மங்கள் யாவும் என்னுடன் சேர
உறவின் சிறகை விரித்தவள்
வெண்பனி வீசிடும் மேகங்களே.. சிந்திடும் மோகன ராகங்களே
உலா வரும்.. நிலா தொடும்.. காதல் ராஜ வீதியில் கானம் பாடி ஊர்வலம்
வசந்தமே.. அருகில் வா.. நெஞ்சமே.. உருக வா..
...
#142 வசந்தமே.. அருகில் வா - அமரன்
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment