#169 சிலுசிலுசிலுவெனக் காத்து - கிழக்குக் கரை

படம்: கிழக்குக் கரை
இசை: தேவா
பாடியவர்: சித்ரா


லலலல லா.. லாலா.. லலலல லா..
லலலல லா.. லாலா.. லலலல லா..
லா.. லாலாலா.. லலலல லா.. லலலல லா..
...

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
ஒரு நேசம்.. ஒரு பாசம்
அந்தக் காத்தும் நாத்தும் நீதான் நாந்தான் வா மாமனே

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
...

வாய்க்காலும் வயலும் சாட்சி.. மாமாவே நான்தான்
ஓயாம ஒன்ன எண்ணித் துரும்பான மான்தான்
வடக்கால போகும் காத்தே.. நாள்தோறும் நானே
உனக்காகத் தூது விட்டு தினம் மாஞ்சு போனேன்
நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் எப்போ தீயாச்சு
மணநாள் வந்து கூட வேணும்
பூமாலை போட வேணும்

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
...

எங்கேயும் பொழப்பைத் தேடிப் போகாதே மாமா
நாள் பாத்துப் பரிசம் போடு நாளாச்சு மாமா
என்னை நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போய்யா என்று விட மாட்டேன் ஆளை
நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ போடும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்பைக் காட்டு மாமா
பேசாம வாட்டலாமா

சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
ஒரு நேசம்.. ஒரு பாசம்
அந்தக் காத்தும் நாத்தும் நீதான் நாந்தான் வா மாமனே
சிலுசிலுசிலுவெனக் காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புதுப்புது வரிகளைப் போட்டு அது படிக்குது பருவத்துப் பாட்டு
...

0 மறுமொழிகள்:

Post a Comment