#171 வளையோசை கலகலகலவென - சத்யா

படம்: சத்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & லதா மங்கேஷ்கர்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
...

: ஒரு காதல் கடிதம் விழி போடும்.. உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
பெ: நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்.. நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
: கண்ணே என் கண் பட்ட காயம்.. கைவைக்கத் தானாக ஆறும்
பெ: முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்
: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
...

பெ: லால லால லாலா.. லாலா..... : ம்..
பெ: லால லால லாலா.. லாலா..... : ஹே..
&பெ: லாலா லாலா லாலா.. லாலா லாலா லாலா லா..
...

பெ: உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்.. பல மாதம் வருடம் என மாறும்
: நீங்காத ரீங்காரம் நான்தானே.. நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
பெ: ராகங்கள் தாளங்கள் நூறு.. ராஜா உன் பேர் சொல்லும் பாரு
: சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்
வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
: சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
பெ: கொட்டட்டும் மேளம்தான் அன்று காதல் தேரோட்டம்
: வளையோசை கலகலகலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
பெ: சில நேரம் சிலுசிலுசிலு என சிறு விரல் படப் பட துடிக்கிது
எங்கும் தேகம் கூசுது
...

0 மறுமொழிகள்:

Post a Comment