#212 முத்து நகையே.. முழு நிலவே - சாமுண்டி

படம்: சாமுண்டி
இசை: தேவா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி

 
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
இன்னும் பல பிறவிகள் நம்முடைய உறவுகள்
வாழும் தொடர்கதைதான்.. உந்தன் நேசம் வளர்பிறைதான்
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

பெ: உன்னப் பார்த்து ஆசப்பட்டேன்.. அதப் பாட்டில் சொல்லிப்புட்டேன்
நீயும் தொட.. நானும் தொட.. நாலு வகைக் கூச்சம் விட
அட்டை போல ஒட்டியிருப்பேன்
ihikhikஇந்தக் காதல் பொல்லாதது.. ஒரு காவல் இல்லாதது
ஊதக் காத்தில் வஞ்சி மாது ஒத்தயிலே வாடும்போது
போர்வை போலப் பொத்தி அணைப்பேன்
பெ: ஆறேழு நாளாச்சு விழி மூடி.. அடி ஆத்தாடி அம்மாடி உனைத் தேடி
: நீதானே மானே என் இளஞ்சோடி.. உனை நீங்காது என்றும் என் உயிர் நாடி
பெ: நித்தம் தவித்தேன்.. நீ வரும் வரைக்கும்

: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

: புள்ளி மானு பெண்ணானதா.. கெண்டை மீனு கண்ணானதா
பூ முடிச்சுப் பொட்டு வச்சு.. புன்னகையில் தேன் தெளிச்சு
பக்கம் ஒரு சொர்க்கம் வருதா
பெ: அட வாய்யா கையத் தொடு.. பள்ளிப் பாடம் கத்துக் கொடு
ஆவணியில் பூப்படைஞ்சே தாவணியைப் போட்டுக்கிட்ட
சின்னப் பொண்ண ஆசை விடுதா
: ஆவாரம் பூ வாட விடுவேனா.. ஒரு அச்சாரம் வெக்காம இருப்பேனா
பெ: தேனாறும் பாலாறும் கலந்தாச்சு.. அன்பு நாளாக நாளாக வளர்ந்தாச்சு
: என்னைப் படைச்சான்.. நீ துணை வரத்தான்

பெ: முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
கண்ணிரண்டும் மயங்கிட.. கன்னி மயில் உறங்கிட
நான் தான் பாட்டெடுப்பேன்.. உன்னைத் தாய் போல் காத்திருப்பேன்
முத்து நகையே.. முழு நிலவே.. குத்து விளக்கே.. கொடி மலரே
...

0 மறுமொழிகள்:

Post a Comment