#217 கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்- தென்றலே என்னைத் தொடு

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & உமா ரமணன்


பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: நீலம் பூத்த ஜாலப் பார்வை மானா? மீனா?
பெ: நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
: கள்ளிருக்கும்..                           பெ: பூவிது.. பூவிது
: கையணைக்கும்..                     பெ: நாளிது.. நாளிது..
: பொன்னென மேனியும்..        பெ: மின்னிட.. மின்னிட..
: மெல்லிய நூலிடை..               பெ: பின்னிடப் பின்னிட..
: வாடையில் வாடிய..               பெ: ஆடையில் மூடிய..
: தேன்..                                                பெ: நான்..

: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே
பெ: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
: பொன்னழகே.. பூவழகே.. என்னருகே
பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
...

: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: ஆசை தீரப் பேச வேண்டும் வரவா? வரவா?
பெ: நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா.. மெதுவா..
: பெண் மயங்கும்..                    பெ: நீ தொட.. நீ தொட..
: கண் மயங்கும்..                        பெ: நான் வர.. நான் வர..
: அங்கங்கு வாலிபம்..              பெ: பொங்கிடப் பொங்கிட..
: அங்கங்கள் யாவிலும்..        பெ: தங்கிடத் தங்கிட..
: தோள்களில் சாய்ந்திட..      பெ: தோகையை ஏந்திட..
: யார்?                                                  பெ: நீ..

பெ: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
பெ: ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே
: கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே
பெ: அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே
: கண்மணி நீ வரக் காத்திருந்தேன்.. ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெ: கண் விழித் தாமரை பூத்திருந்தேன்.. என் உடல் வேர்த்திருந்தேன்
...

0 மறுமொழிகள்:

Post a Comment