படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஏசுதாஸ் & எஸ்.ஜானகி
ஆ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...
ஆ: தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்
பெ: சாரல் பாடும் சங்கீதம்.. கால்கள் தாளம் போடும்
ஆ: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெ: நனைந்த பிறகு நாணம் எதற்கு
ஆ: மார்பில் சாயும்போது
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
ஆ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...
ஆ&பெ: தரரத் தரரத் தரரா.. தரரத் தரரத் தரரா..
...
ஆ&பெ: தரரத் தரரத் தரரத் தரரத் தரரத் தரராரா..
...
பெ: தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே
ஆ: மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே
பெ: மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
ஆ: இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
பெ: சாரம் ஊறும் நேரம்
ஆ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
பகலே போய்விடு.. இரவே.. பாய் கொடு
நிலவே.. பன்னீரைத் தூவி ஓய்வெடு
பெ: தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா.. சத்தம் இன்றி முத்தம் இடும்
...
#218 தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment