படம்: செண்பகமே செண்பகமே
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
...
பெ: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது
ஆ: ஆ.. ஆஆஆ.. கோலம் போட்டு ஜாடை சொன்னது கன்னி மானே
கோடு நமக்கு யாரு போட்டது
பெ: நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்
நெத்தியில பொட்டு வச்சு உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்
ஆ: நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா நாளும் நாளும் சந்தோஷம்
பெ: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்
ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
பெ: நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
...
பெ: ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ..
ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆஆ ஆஆ.. ஆஆ.. ஆ..
...
ஆ: மீண்டும் மீண்டும் கூடிச் சேருது பொன்னி ஆறு
மோகத்தோடு கூடிப் பாடுது
பெ: ஆ.. ஆஆஆ.. கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது உங்க பாட்டு
கேள்வி போல என்னை வாட்டுது
ஆ: ஆத்து வெள்ளம் மேட்டை விட்டு பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய்ப் பாடி வரும்
பெ: ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி என்னை இப்போ கிள்ளாதே
ஆ: போதும்.. போதும்.. கண்ணால் என்னைக் கட்டி இழுக்கிற செண்பகமே
பெ: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே எம்மனச தச்சதென்ன தச்சதென்ன
பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது
ஆ: வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா வச்சுப்புட்டா
நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
...
# 53 வாசலிலே பூசணிப்பூ - செண்பகமே செண்பகமே
வழங்கியவர்:
நிலாக்காலம்
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
Post a Comment