# 74 மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்

படம்: சத்ரியன்
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடியென்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...

கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா.. நானும் மீனைப் போல கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே.. ஓஓ ஓஓஒ.. மோகம் வந்ததோ
மோகம் வந்ததும்.. ஓஓ ஓஓஓ.. மௌனம் வந்ததோ
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே.. பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது
...

0 மறுமொழிகள்:

Post a Comment